spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்பிரபல எழுத்தாளர் காலமானார்

பிரபல எழுத்தாளர் காலமானார்

-

- Advertisement -

பிரபல எழுத்தாளர் காலமானார்

பிரபல மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகமது வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

எழுத்தாளர் பீர் முகம்மது

உடல்நலக்குறைவு காரணமாக மலேசியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சை.பீர்முகமது இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 83. வெண்மணல், பெண் குதிரை, வேரும் வாழ்வும், திசைகள் நோக்கிய பயணங்கள் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் தேவக்கோட்டையை பூர்வீகமாக கொண்ட சை.பீர்முகமது மறைவுக்கு தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

we-r-hiring

அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பிரதமர் அன்வர் இப்ராகிம் பீர் முகமதுவின் இலக்கியச் சேவைகளுக்காக அவருக்கு சிறப்பு செய்தார்.

MUST READ