
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, அணைக்கு வரவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
“மீன்பிடி உரிமையை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!
ஈரோடு மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்களின் ஒன்றான கொடிவேரி அணை, இந்த அணைக்கு ஈரோடு மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
தற்போது, பவானி சாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், அணைக்கு வரும் உபரிநீர் பவானி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை சாலை விபத்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!
இதனால் கொடிவேரி அணை வழியாக வினாடிக்கு 1,120 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கொடிவேரி அணை வழியாக அதிகளவு உபரிநீர் வெளியேறி வருவதால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி அணைக்கட்டுக்கு வரவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.