- Advertisement -
பிரபல மலையாள நடிகர் விநாயகன் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ரஜினி, நெல்சன் கூட்டணியில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான படம் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வசூல் வேட்டை நடத்தியது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் ,வசந்த் ரவி ,விநாயகன், யோகி பாபு, ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பான் இந்திய நடிகர்கள் ஒன்று கூடிய இந்த படம் உலகம் முழுவதும் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் விநாயகன் வில்லனாக மிரட்டி இருந்தார். விநாயகனின் வர்மன் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது. குறிப்பாக தமிழும் மலையாளமும் கலந்த அவரின் பேச்சும், அவருக்கான வசனங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
