தாயின் கவன குறைவால் பறிபோனது குழந்தையின் உயிர்
சோப்பு நுரை நிறைந்த பக்கெட்டில் தண்ணீர் இருந்தபோது தலைக்குப்புற குழந்தை விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குழந்தையை மீட்டு பரபரப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
அம்பத்தூர் அருகே பாடி ஸ்ரீநிவாசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் இவருக்கு திருமணம் ஆகி ஒன்றரை வயதில் சர்வேஷ் என்ற ஆண்குழந்தை உள்ளது.இவரது மனைவி பொன்னுமணி வீட்டின் வெளியே துனி துவைத்து கொண்டிருந்த போது அங்கு விளையாடி கொண்டிருந்த சர்வேஷ் தண்ணீர் நிரப்பி வைத்திருந்த பிளாஸ்டிக் டப்பில் தலை குப்புர கவிழ்ந்து விழுந்துள்ளான்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட தாய் பதரி போன நிலையில் குழந்தையை மீட்டு பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இரந்து போனதாக தெரிவித்தனர்..
மேலும் சம்பவம் நடந்த நேரத்தில் குழந்தையை அவசர அவசரமாக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லக்கூடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து மருத்துவமனை வந்த கொரட்டூர் காவல்துறையினர் குழந்தையின் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசுக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.