
இடைத்தரகர்களை வைத்து கடந்த மூன்று மாதங்களாக என்னையே மிரட்டி இருக்கிறார்கள் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சில்க் சுமிதா பிறந்த நாள்-கேக் வெட்டி கொண்டாடிய தீவிர ரசிகர்
நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு, “பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் இடைத்தரகர்கள் மிரட்டல் விடுக்கிறார்கள். இடைத்தரகர்கள் மூலம் பணம் பறிக்கும் முயற்சி நாடு முழுவதும் நடக்கிறது. மிரட்டி குறிப்பிட்ட தொகையை வாங்க அமலாக்கத்துறையின் இடைத்தரகர்கள் முயல்வதாக தகவல் கிடைக்கிறது.
இடைத்தரகர்களை வைத்து கடந்த மூன்று மாதங்களாக என்னையே மிரட்டி இருக்கிறார்கள். இடைத்தரகர்களை வைத்து வருமான வரித்துறை, சி.பி.ஐ. அதிகாரிகள் உருட்டல், மிரட்டல் செய்கின்றனர். பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை குறி வைக்கின்றனர். கொஞ்சநாள் என்னை தலைமறைவாக இருக்கக் கூறினார்கள்; செல்போன் எண்ணை மாற்றச் சொன்னார்கள். என்னைப் போன்றே பலருக்கும் மத்திய அமைப்புகளின் இடைத்தரகர்கள் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
ஆசிரியர் கி.வீரமணியின் பிறந்தநாள்-முதலமைச்சர் வாழ்த்து
இடைத்தரகர்கள் மூலம் மத்திய விசாரணை அமைப்பு அதிகாரிகள் சிலரிடம் தொகையை மிரட்டி வாங்குகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். சபாநாயகரின் பேட்டியால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.