அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள மிக்ஜம் வட கடலோர மாவட்டங்களை பந்தாடி வருகிறது. குறிப்பாக சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்பு காரணம் கருதி மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தொடர் கனமழையால் பனி போர்த்தியது போல நகரம் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. நாளை வரை இதே நிலை தொடரும் என்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக வடகடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு பள்ளிகள், அரசு, தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மழையின் தீவிரத்தால் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் நாளை (டிசம்பர் 5) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வட தமிழகத்தில் அதிக கனமழையும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் விட்டுவிட்டு மித முதல் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்று இரவு புயல் கரையை கடந்த பின்னும் முழுமையாக கரையைக் கடக்கும் வரை கனமழை நீடிக்கும்.
4 மாவட்டங்களை தொடர்ந்து… ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
-
- Advertisement -