- Advertisement -
புயல் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறார்.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் தீவிர புயலால், சென்னை முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. 47 ஆண்டுகளில் இல்லாத அளவு, 2015-ம் ஆண்டை காட்டிலும் கனமழை வெளுத்து வாங்கியது. மழை நின்று மூன்று நாட்கள் ஆன போதிலும், சென்னை நகரம் இதுவரை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பல இடங்களில் தேங்கிய தண்ணீர் வடியாமல் அப்படியே உள்ளது. இதனால், மக்கள் மற்றும் மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்ல முடியாத சூழல் உருவாகி வருகிறது. அதுமட்டுமன்றி, பல இடங்களில் இதுவரை தொலைதொடர்பு சேவைகள் முறையாகவில்லை. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 15 இடங்களில் அதி கனமழை பதிவானது.


கனமழை காரணமாக சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கடும் சேதம் ஏற்பட்டது. மழை நின்ற போதிலும், கட்டடங்களை மழைநீர் சூழ்ந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பலர் அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் திரை நட்சத்திரங்கள் பலரும் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர். சிலர் அரசுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர்,.



