
செங்கல்பட்டு அரசு நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தாடியை கட்டாயம் மடிக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
72-வது பிறந்தநாள் கொண்டாடிய பழம்பெரும் நடிகை… சீரியல் படப்பிடிப்பு தளத்தில் கோலாகலம்…
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் நர்சிங் கல்லூரியில் காஷ்மீரைச் சேர்ந்த 15- க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களிடம் தாடி வளர்க்கக் கூடாது என்றும் தாடியை மடித்தால் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் எனவும், கல்லூரி நிர்வாகம் கூறியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக காஷ்மீர் மாணவர் சங்கத்தினர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், கல்லூரி நிர்வாகத்தின் செயல் ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
19 வயதில் பாலியல் தொல்லை… பிக்பாஸ் நடிகை குற்றச்சாட்டு…
சமூகத்தில் உள்ள பன்முகத்தன்மை, அதன் மீதான மரியாதைக் குறித்து கேள்வி எழுப்பும் வகையில் இருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் அனைத்து தரப்பு மாணவர்களுக்கு மதிப்பு அளிப்பதுடன் அவர்களின் உரிமைகள், சுதந்திரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மாணவர்கள், இத்தகைய செயல்களைக் கண்டிப்பதுடன் உரிய தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளனர்.