தமிழ்நாட்டில் 100% பாஜக வெற்றிக்கு வாய்ப்பு இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படக் கண்காட்சி விழா நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், . I.N.D.I.A. கூட்டணி வெல்லப் போகிறது. என பிரதமர் நரேந்திர மோடியே உண்மையை ஒத்துக் கொண்டார். தமிழ்நாட்டில் 100% பாஜக வெற்றிக்கு வாய்ப்பு இல்லை. தேர்தல் முடிவு கருத்துகணிப்புகளை பொருட்படுத்தவில்லை. மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு I.N.D.I.A. கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என முடிவு எடுக்கப்படும். அதன் முடிவு தெரியும். விரைவில் இந்தியாவை சூழ்ந்துள்ள இருள் அகன்று, ஜூன்4-ல் புதிய விடியல் மலரும்” என்றார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் பாஜக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என்றும், தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. என அவர் இவ்வாறு பேசினார்.