கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஹார்மோன்களின் மாற்றத்தால் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஒரு சிலருக்கு இந்த பிரச்சனை பிரசவம் வரையிலும் நீடிக்கும். அதே சமயம் கர்ப்ப காலத்தில் ஒரு சில உணவு வகைகளை தவிர்ப்பதன் மூலம் கருவில் இருக்கும் சிசு ஆரோக்கியமாக வளரும்.
அதாவது கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில், காரசாரமான உணவுகளை தவிர்த்தல் நல்லது. மேலும் அதிக சோர்வினை உண்டாக்கும் உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
சிட்ரஸ் பழ வகைகள் வாயுவை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதால் அதனை முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது.
காபி, டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். காப்பி, டீ போன்றவை நம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை குறைப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
எண்ணெயில் பொரித்த உணவுகள் துரித உணவுகள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். இது செரிமான கோளாறுகளை உண்டாக்கும் வாய்ப்புள்ளது.
மேலும் முட்டைக்கோஸ், காலிபிளவர், ஊறுகாய் போன்றவைகளையும் தவிர்க்க வேண்டும்.
அதே சமயம் கர்ப்பிணிகள் 8 மாதத்திற்கு பின்னர் அதிகமாக நட்ஸ் வகைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. குறைந்த அளவில் எடுத்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் இது குழந்தையின் உடல் எடையை அதிகரித்து விடுமாம்.
அதே சமயம் வாந்தி, குமட்டல் இருக்கும் சமயங்களில் நெய் எடுத்துக்கொள்ளக் கூடாது. இது சிலருக்கு தலை சுற்றலை உண்டாக்கும்.
இருப்பினும் கர்ப்பிணி பெண்கள் ஒவ்வொரு மாதமும் மருத்துவரை தவறாமல் அணுகி அவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்ட பின்பே உணவு முறைகளை பின்பற்றுவது நல்லது.