திருப்பதி மலை பாதையில் செல்லும் வாகனங்களுக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் இனி ஃபாஸ்டேக் கட்டாயம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியாகியிட்டு உள்ளது.திருப்பதி மலை பாதையில்செல்லும் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம் என்ற புதிய நடைமுறை ஆகஸ்ட் 15-ஆம் தேதி அமல்படுத்தப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அலிபிரி சோதனை சாவடியில் சுங்க கட்டணத்துடன் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இங்கு ஏற்படும் கூட்ட நெரிசலை தடுப்பதற்காக ஆகாஷ் 15 ஆம் தேதி முதல் ஃபாஸ்டேக் நடைமுறை அமல்படுத்தப் போவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும், அலி பிரி சோதனை சாவடியில் ஃபாஸ்டேக் வழங்க தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதுமட்டுமல்லாமல் ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்காக ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து தனி மையம் அமைக்கப்பட்டுள்ளன.
