- Advertisement -
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து பரபரப்பான சம்பவம் ஏற்பட்டது.


சுயேச்சை வேட்பாளரான தலித் ஜெயராஜின் மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அவர், கோவை–சிறுவாணி சாலையில் படுத்து உருண்டு புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அகற்றினர்.
வேட்புமனு நிராகரிப்பு குறித்து அவர் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழில் உற்பத்தியில் மிகப் பெரிய வளர்ச்சி – இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் முதலிடம்
