spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஆங்கிலத்தால் ஆர்.எஸ்.எஸ்-க்கு வந்த ஆப்பு! வாய்விட்டு கதறிய அமித்ஷா!

ஆங்கிலத்தால் ஆர்.எஸ்.எஸ்-க்கு வந்த ஆப்பு! வாய்விட்டு கதறிய அமித்ஷா!

-

- Advertisement -

அறிவியலின் மொழியாக ஆங்கிலம் உள்ளது. அந்த மொழியை மக்கள் கற்றுக் கொண்டால் இங்கே சனாதனத்தை நிலை நிறுத்த முடியாது. அமித்ஷா உள்துறை அமைச்சராகவோ, மோடி தொடர்ந்து பிரதமர் ஆக முடியாது என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ஆங்கில மொழி கற்பது குறித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து சர்ச்சையாகி இருக்கும் நிலையில், இது தொடர்பாக ரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- ஆங்கிலத்தில் பேசுபவர்கள் வெட்கி தலைகுனியும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஆங்கிலம் என்பது அறிவியியல் மொழி. உலகையே இணைக்கக்கூடிய இணைப்பு மொழியாக உள்ளது. உலகின் புதிய புதிய கண்டுபிடிப்புகள் எல்லாம் ஆங்கிலம் மூலமாக தான் அறிந்துகொள்ள முடியும். மாநிலங்களுக்கு இடையிலான  மொழி வேறுபாட்டை கடந்து அனைவரையும் ஒருங்கிணைக்க ஒரு பொதுமொழி தேவைப்படுகிறது. அந்த இடத்திற்கு இந்தி வர வேண்டும் என்று பாஜகவினர் ஆசைப்படுகிறார்கள். நாம் சொல்வதை மக்கள் கேட்க வேண்டும் என்றால் அவர்களுக்கு கல்வி அறிவு இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆங்கிலத்தை கற்றுக்கொண்டதால் இன்றைக்கு உலகம் முழுக்க தமிழர்கள் வசிக்கின்றனர். ஐ.டி., மருத்துவம், பொறியியல் என எத்தனையோ தொழில்களில் கொடிகட்டி பறக்கிறார்கள்.

தமிழ்நாட்டுகாரர்களை பொறுத்தவரை இந்தி மொழி பேசுபவர்கள், ஒரு அந்நிய மொழிதான் பேசுகிறார்கள். ஒடிசா, பெங்காலி போன்றவை என்னுடைய மொழியா? தமிழ்நாட்டிற்கு நெருக்கமான மொழியா இது? இந்திய கலாச்சாரம் என்ற ஒன்று உண்மையில் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு மொழிக்கும் தனித்த கலாச்சாரங்கள், பண்பாடுகள் உள்ளன. இந்துத்துவா கோட்பாடுகளை நிலை நிறுத்துவதற்கும், மதவாத கருத்துக்களை நிலை நிறுத்துவதற்கு அறிவியல் தடையாக உள்ளது என்பதால், அறிவியல் மொழியாக இருக்கும் ஆங்கிலம் தடையாக உள்ளதாக நினைக்கின்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தேச பக்தி என்கிற பெயரால் போர் வெறியை ஆதரிக்கின்ற பேச்சுக்களை பேசுகின்றனர். அல்லது மதவெறியை தூண்டும் விதமாக பேசுகிறார்கள். ஆங்கிலம் தெரிந்தவர்கள் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக இந்த செய்தி உண்மையா? போலியா? என்று கண்டுபிடிக்கின்றனர். இந்தி மொழி தெரியாததால் அமித்ஷா பேசுவதிலேயே எத்தனை சதவிகிதம் உண்மை உள்ளது என்று எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு ஆங்கிலம் தெரிந்தால் அவர் பேசுகிற பொய்யை நான் கண்டுபிடித்து விடுவேன். தற்போது பிரச்சினை என்ன என்றால் ஆங்கிலம் கிடையாது. ஆங்கிலத்தின் வழியாக இவர்கள் அறிவு பெறுகிறார்கள் என்பதுதான்.

தமிழ்மொழியில் எல்லாமே சிறப்பாக இருப்பதாக பேசுகிற நமக்கே கூட அறிவியல் மொழிகள் தேவைப்படுகிறது. பழம்பெருமை பேசுவதால் நமக்கு எதுவும் கிடைக்கப் போவது கிடையாது. அறிவியலால் தான் மக்களை ஒருங்கிணைக்க முடியும். இவர்கள் அறிவியலை எதிரியாக பார்க்கிறார்கள். எவை எல்லாம் மக்களை ஒன்றிணைக்கிறதோ, அது இல்லாமல் போக வேண்டும் என்பது அவர்களின் இலக்கு. சனாதனம் என்கிற சாதி கட்டுமானத்தை உடைப்பதற்கு ஆங்கிலம் ஒரு உளியாக இருந்து அடிக்கிறது. ஆங்கிலத்தை மட்டும் ஒருவர் கற்றுக்கொண்டால் அவர் மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவராக மாறிவிடுவார். அதனால் அவதூறு பரப்புவதற்காக அது கிறிஸ்துவ கலாச்சாரம் என்று சொல்வார்கள். பிரிட்டிஷ்காரர்கள் இந்த மண்ணுக்கு வருவதற்கு முன்பு கல்வி எல்லோருக்கும் பொதுவானதாக இல்லை. குருகுலம் என்கிற பெயரில் உயர் சாதியினருக்கு மட்டும்தான் கல்வி பொதுவானதாக இருந்தது. ஆங்கிலேயர்களை எதிர்ப்பது என்பது வேறு. ஆங்கிலத்தை எதிர்ப்பது என்பது வேறு. கடந்த காலங்களில் ஆங்கிலத்தை படிக்க கூடாது என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூடி அறிவித்தார்கள். அதனால் இஸ்லாமிய சமூகம் பின்தங்கி விட்டது. தற்போது அதேபோல் இந்துக்கள் ஆங்கிலம் படிக்கக்கூடாது என்று அமித்ஷா சொல்கிறார்.

அறிவியலின் மொழியாக ஆங்கிலம் உள்ளது. அதை மக்கள் கற்றுக்கொண்டால் சனாதனத்தை நிலை நிறுத்த முடியாது. அமித்ஷா உள்துறை அமைச்சராக இருக்க முடியாது. மோடி தொடர்ந்து பிரதமர் ஆக முடியாது என்கிற நிலை உள்ளதால், ஆங்கிலம் படிக்காதீர்கள் என்று சொல்கின்றனர். அமித்ஷா, ஆங்கிலத்திற்கு எதிராக பேசியுள்ளது அதிகார துஷ்பிரயோகம் ஆகும். அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு குறிப்பிட்ட மதம் குறித்து பேசுகிறார்கள், குறிப்பிட்ட சாதி குறித்து பேசுகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை என்ன என்றால் கல்வி கற்றவர்கள், பாஜக – ஆர்எஸ்எஸ் சொல்வதை கேட்க மறுக்கிறார்கள். அதனால் தான் நீட் தேர்வை கொண்டு வந்தார்கள். தற்போது புதிய கல்விக்கொள்கை மூலம் 3,5,8ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வை நடத்தி அவர்களை வடிகட்டுவதுதான். அவர்களை படிக்காமல் குடும்ப தொழில்களை பார்க்க வைப்பதுதான் பாஜகவின் திட்டமாகும். ஆனால் இது நடைமுறை சாத்தியம் இல்லை.

Congress party leader Rahul Gandhi  

இந்த இடத்தில் தான் ராகுல்காந்தியின் தேவை அதிகரிக்கிறது. அவரது குரலை தான் இன்றைய இளைஞர் சக்தி ஏற்றுக்கொள்கிறது. இந்தியாவில் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி உள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டிய மத்திய அரசாங்கம், இதுபோன்ற தவறான கருத்துக்களை சொல்கிறார்கள். பாஜகவினர் தேர்தலில் மோசடி செய்துதான் திரும்ப திரும்ப அதிகாரத்திற்கு வருகிறார்கள் என்கிற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்து கொண்டிருக்கிறது. ராகுல்காந்தியின் குரல் என்பது ஒட்டுமொத்த இந்தியாவின் குரலாகும். அமித்ஷாவின் குரல் என்பது சனாதனத்தின் குரலாகும். ஆங்கிலத்தில் படிப்பதால் அதிகாரிகள் இறக்கம் அற்றவர்களாக இருப்பதாக அமித்ஷா பேசியுள்ளார். இறக்கத்தை பற்றி யார் பேசுவது? குஜராத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கலவரங்களை நிகழ்த்தியவர்கள் பாஜகவினர். மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி சக மனிதர்களை அடித்துக்கொல்வதற்கு தூண்டுகிறவர்கள். இஸ்லாமியர்களை சொந்த மண்ணிலேயே அதிகளாக மாற்றிய இவர்கள் இறக்கத்தை பற்றி பேசலாமா? மகாத்மா காந்தியை விட இறக்கத்தை கடைபிடித்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரை கொலை செய்த கூட்டம் இறக்கத்தை பற்றி பேசுகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ