Homeசெய்திகள்கட்டுரைபின்வாங்கிய பவன்! அமித்ஷாவின் அடுத்த ஆட்டம்! பின்னணி உடைக்கும் இந்திரகுமார்!

பின்வாங்கிய பவன்! அமித்ஷாவின் அடுத்த ஆட்டம்! பின்னணி உடைக்கும் இந்திரகுமார்!

-

- Advertisement -

சனாதன யாத்திரை மேற்கொள்வதாக அறிவித்த ஆந்திர துணை முதலமைச்சர்  பவன் கல்யாண், தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பின் காரணமாகவே தான் சாதாரண யாத்திரையை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார் என பத்திரிகையாளர் இந்திரகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆந்திர துணை முதலமைச்சர் தமிழகம் மற்றும் கேரள கோவில்களில் சுற்று பயணம் மேற்கொள்வதன் பின்னணி குறித்து பத்திரிகையாளர் இந்திரகுமார், பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், முதலில் சனாதன யாத்திரை போவதாகத்தான் அறிவித்திருந்தார். அதற்கு தமிழ்நாட்டில் இருந்து கடுமையான எதிர்வினைகள் வந்தன. இதன் காரணமாக மீண்டும் சனாதன யாத்திரை என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு வந்தால் இருக்கும் மரியாதையும் போய்விடும். மேலும், அவரது திரைப்படங்களுக்கான மார்க்கெட் பாதிப்பிற்குள்ளாகும். அதனால் அவர் பெயர் சொல்லாமல் வந்துவிட்டு செல்கிறார். ஆனால் பவன் வருகைக்கு பின்னால் உள்ள விஷயத்தை நாம் கவனிக்க வேண்டியது அவசியம். தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் அவர் கோவில் கோவிலாக சுற்றிக்கொண்டிருக்கிறார். கோவில்களுக்கு பின்னால் இவர்கள் அரசியலை தொடங்கி இருக்கின்றனர். திருப்பரங்குன்றம் கோவிலை வைத்து ஏற்கனவே பாஜக பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் கோவிலை மையப்படுத்தி ஏற்கனவே பல விதமான வதந்திகளை பரப்பியுள்ளனர். கோவில் நிர்வாகம் மீதும்,  அரசு மீதும் பல்வேறு அவதூறுகளை பரப்பினர்.

தற்போது பவன் கல்யாண் வந்து சென்ற பின்னர் இவர்கள் மீண்டும் கோவில் விவகாரத்தை கையில் எடுப்பார்கள். பவன் கல்யாண் வெறுமனே, தனிப்பட்ட முறையில் கோவில்களுக்கு வந்து செல்வதாக தெரியவில்லை. அவர் ஏற்கனவே திருப்பதி கோவிலை வைத்து செய்த அரசியலை எல்லோரும் அறிவார்கள். அது தேசிய அளவில் பூதாகரமாகியது. அதில் இந்துக்கள் மனது புண்படுவதாக அவர்கள் வதந்திகளை கட்டமைத்ததை பார்த்தோம். தற்போது மற்ற கோவில்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறபோது, அதை மையப்படுத்தி அடுத்து பிரச்சினைகளை கிளப்ப போகிறார்கள். அதற்கு முன்னதாக பிரபலங்களை அந்த கோவில்களுக்கு அனுப்புவதாகவே தெரிகிறது.

பவன் கல்யாண் இது தனது தனிப்பட்ட ஆன்மிக யாத்திரை என்கிறார். பாஜகவினர் ரத யாத்திரை நடத்துவது முழுக்க முழுக்க அரசியல்தான் செய்கின்றனர். 1991களில் பாஜக தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி, எல்.கே.அத்வானி போன்றோர் கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை சென்று எல்லா இடங்களிலும் கொடி ஏற்றப்போவதாக அறிவித்தனர். அந்த யாத்திரை சென்ற இடங்களில் எல்லாம் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே கலவரத்தை தூண்டுவதுதான் இவர்களது நோக்கமாக இருந்தது. கர்நாடகாவில் ஹுப்ளி என்ற இடத்தில் இவர்கள் செய்த கலவரம் உள்ளிட்ட பல விஷயங்கள் இதனுடன் இணைந்துள்ளது. இவர்கள் அரசியல் என்று சொல்வதுதான் கூடுதல் சந்தேகத்தை கிளப்புகிறது. அரசியல் இல்லை என்றால் அங்கேயே இருக்க வேண்டியது தானே. ஒன்று ஜோசியக்காரர் சொல்லி அனுப்பி இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் டெல்லியில் இருக்கக்கூடிய ஜோசியக்காரர்  சொல்லி அனுப்பி இருக்க வேண்டும்.

அப்படி டெல்லி ஜோசியக்காரர் சொல்லி அனுப்பியதாக இருந்தால் பவன் கல்யாண் வருகைக்கு பின்னர் நடைபெறும் நிகழ்வுகளில் இருந்துதான் இதனுடைய அரசியல் தன்மையை நாம் உறுதி செய்ய முடியும். நிச்சயமாக இதன் பின்னால் அரசியல் திட்டம் இல்லாமல் இல்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். ஏனென்றால் இவர்கள் அரசியல் இல்லை என்று சொல்லிவிட்டு செய்த எல்லா பயணங்களும் சர்ச்சையிலேயே முடிந்திருக்கிறது. அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என பவன் கல்யாண் சொல்லிக்கொள்வது தமிழ்நாட்டில் அவருக்கு வரக்கூடிய எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் வரக்கூடிய எதிர்வினைதான். மற்றபடி இங்கே அவர் யார் யாரை சந்தித்தார் என்பது இன்னமும் கேள்வியாகத்தான் உள்ளது.

"தமிழகத்திற்கு ரூபாய் 2.47 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில்!
Photo: Amit Shah

உதயநிதிக்கு எதிராக சனாதனத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் காணாமல் போவார்கள் என்று பவன் கல்யாண் சொன்னது இன்றும் நினைவில் உள்ளது. அப்படி அவர் தனது கருத்தில் உறுதியான நபராக இருந்தால் தமிழ்நாட்டிற்கு வந்து அந்த கேள்வியை எழுப்பி இருக்க வேண்டும். சனாதனத்தின் மீதான அவரது பாசம் உண்மையாக இருக்குமானால் தமிழ்நாட்டிற்கு வந்து அந்த அரசியலை பேசி இருக்க வேண்டும் அல்லவா. அப்படி என்றால் பவனை பயன்படுத்தி பாஜக செய்யும் அரசியலாகும். பவன் என்பவர் ஒரு பகடைக்காய் தான். அதனுடைய வேளை என்பது பாஜக சொல்வதை செய்ய வேண்டும். அரசியல் இல்லாமல் போய்விட்டு வாபா என்றால், ஆமாம் போய்விட்டு வருகிறேன் என்று சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார். உதயநிதியை பற்றி பேசி 2 மாதம் எங்கேஜ் பண்ணுங்க என்றால், பவன் கல்காண் செல்வார். லட்டு பிரச்சினை வந்திருக்கிறது. அதை வைத்து ஜெகன் மோகனுக்கு எதிராக கிறிஸ்தவன் என ஒரு பரப்புரையை எடுத்துவிடு என்றால் அதையும் செய்வார். ஆனால் தனிப்பட்ட முறையில் அவரது வாழ்க்கையை பாருங்கள் வெளிநாட்டு பெண்ணை காதலித்து திருமணம் முடித்தவர். இருவரும் வெவ்வேறு நம்பிக்கைகளை கொணடவர்கள்.

இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும்போது பவன் கல்யான் ஒரு பகடைக்காய்தான். தமிழ்நாட்டில் எப்படி விஜய் ஒரு பிரபலமான நபர். அவரை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் பெரியாரை பேசலாம் என்கிற பெயரில் மடைமாற்றம் செய்யு பணியில் ஈடுபடுகிறது. ரஜினிகாந்த் என்பது ஒரு முகம். அதை வைத்து பாஜகவினர் தாங்கள் செய்ய நினைக்கும் அரசியலை செய்ய முற்படுவார்கள்.அதேபோல், பவன் கல்யாண் என்ற முகமூடிக்கு பின்னால் இருந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ் – பாஜக பண்ணக்கூடிய வேலைகள் என்பது தமிழ்நாட்டிற்கு புதிதானதும் அல்ல. புரியாததும் அல்ல. இதை இரண்டையும் தமிழ்நாடு பார்த்து பழக்கப்பட்டு விரட்டி அடித்த ஒன்றுதான்.

விவாதப் பொருளான அல்லு அர்ஜுன் கைது விவகாரம்..... அரசியல் பழிவாங்கும் நோக்கமா?

பவன் கல்யாண் எடுத்துள்ள கருத்து என்பது, பாஜகவினுடைய கருத்துக்கள் ஆகும். எப்படி என்றால் பாஜகவுக்கு என்று சொந்தமான செல்வாக்கை தென்னிந்தியாவில் உருவாக்குவது என்பது நடக்காத காரியம். இதனால் ஏற்கனவே இங்கே மதச் சார்பற்றவர்களாக அடையாளப்படுத்தப்பட்ட முகங்கள், மதச்சார்புள்ள தளத்திற்கு மாறும்போது நான் அதில் இருந்தவர்கள்தான், அங்கு இப்படி எல்லாம் அநியாயம் நடக்கிறது என்று ஒரு பொய்யான பரப்புரையை மக்களை ஏமாற்றுவதற்காக செய்வது நாம் அனைவரும் நன்கு அறிந்த ஃபார்முலா ஆகும். இதனை பயன்படுத்திதான் பவன் கல்யாண், சீமான் போன்றோரை பயன்படுத்துகின்றனர். சீமானை வைத்து ஏன் இன்று பெரியார் அரசியலை பேசுகிறார்கள். பெரியார் அரசியலை பாஜகவை சேர்ந்த அண்ணாமலை,ஹெச்.ராஜா போன்றோர் பேசியபோது எடுபடவில்லை. அதனால் பெரியாரை பின்பற்றிவிட்டு தற்போது வெளியில் இருக்கும் ஒரு நபரை பயன்படுத்தி பெரியாரை அவதூறு செய்வது. கேட்டால் ஆமாம் ஒரு காலத்தில் நான் இருந்தேன் என்பது என்று நம்ப வைக்க முயற்சித்தனர். ஆனால் அதை மக்கள் நம்பவில்லை. அப்படி நம்பி இருந்தால் ஈரோட்டில் டெபாசிட்டாவது கிடைத்திருக்கும்.

இதுதான் விஜய் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம். நாளைக்கு நீங்களும் அம்பலப்படத்தான் போகிறீர்கள். அதுதான் பாஜகவின் திட்டமும் கூட. அதன் வாயிலாக உங்களுக்கு சில அனுபவங்களும் ஏற்படலாம். ஆனால் அது எதுவுமே உங்கள் மீது மக்கள் வைத்திருக்கிற நம்பிக்கைக்கு கிடைக்கக்கூடியது அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இது ஆந்திரா கிடையாது. ஆந்திராவில் அவர்கள் உருவாக்க நினைத்ததை உருவாக்கியதற்கும், தமிழ்நாட்டில் அவர்கள் உருவாக்க நினைக்கும் மாற்றங்களை உருவாக்க முடியாததற்குமான இடைவெளியை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அந்த இடைவெளியை குறைப்பதற்காகத் தான் தமிழ்நாட்டு கோவில்களில் பவன் கல்யாண் யாத்திரை போவது, பெரியாரை விமர்சித்து சீமானை பேச வைப்பது போன்றவை ஆகும்.

பெரியாரை ஆதரிப்பது போல சொல்லி, பெரியாரை பற்றி விஜய் பேசாமல் அமைதியாக இருப்பது. பெரியாரியத்தை விஜய் மனமுவந்து ஏற்றுக்கொண்டிருந்தார் என்றால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும். ஏன் குரல் கொடுக்கவில்லை. தைப்பூசத்திற்கு வாழ்த்து சொல்லி ட்விட் போட நேரம் உள்ளது. ஆனால் திருப்பரங்குன்றத்தில் மதவாத அமைப்புகள் செய்யும் கலவரத்திற்கு கண்டனம் தெரிவிக்க அவருக்கு நேரம் இல்லை என்றால், பாஜகவின் அடிமடியில் உள்ள இந்துத்துவ அரசியலில் கை வைப்பதற்கு விஜய் பயப்படுகிறார் என்று அர்த்தம். அந்த பயம் விஜய்க்கு வருவதற்கு காரணம், அவர் பின்னால் இருந்து இயக்கக்கூடியவர்கள் யார் என்ற சந்தேகத்தில் இருந்து வரக்கூடியதாகும்.

இதன் எக்ஸ்ட்ரீம் வெர்ஷன்தான் பவன் கல்யாண். அவரது யாத்திரை மூலம் தமிழ்நாட்டில் பாஜக செய்ய நினைப்பது, பணத்தை விநியோகிப்பது அல்லது கலவரத்திற்கு ஆட்களை சேர்ப்பதாகத்தான் இருக்கும். மற்றபடி அவர் பக்திக்காக எத்தனை முறை தமிழ்நாட்டிற்காக வந்துள்ளார்.  மத நம்பிக்கைகள் மூலம் மக்களிடம் விளையாட பார்க்கிறார்கள். அதற்கு தமிழ்நாடு பலியாகது. இந்த எதார்த்தம் தெரிந்ததால் தான் பவன் கல்யாண் வெளிப்படையாக சனாதன யாத்திரை என்று சொல்லாமல் சாதாரண யாத்திரை என்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ