பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி பின்னடைவை சந்திக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதனால் வாக்குகளை கவரும் விதமாக சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளதன் அரசியல் பின்னணியை விளக்கி யூடியூப் சேனல் ஒன்றுக்கு தராசு ஷ்யாம் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது: – மக்கள் தொகை கணக்கெடுப்பு உடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த மாற்றத்திற்கு காரணம் பீகார் சட்டமன்றத் தேர்தல் தான். 2024 காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முக்கியமான 2 விஷயங்கள் என்றால் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றொருன்று 50 சதவீதமாக உள்ள இடஒதுக்கீட்டு வரம்பு நீக்கமாகும். அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, இது இந்துக்களை பிளவு படுத்துகிற முயற்சி என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு தேவையற்றது என்று சொன்னார். மற்றொன்று ஆர்எஸ்எஸ் சித்தாந்தமாகும். இந்தியாவில் சாதி அடிப்படையில் எதை செய்தாலும் இந்துக்களிடையே ஒற்றுமை பாதிக்கப்படும் என்று சொல்கிறார்கள். மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார். அதற்கு பிறகுதான் சாதிவாரி கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் இது பத்திரிகை தலைப்புச் செய்தியாகத்தான் உள்ளது. எப்போது கணக்கெடுப்பு நடைபெறும் என்கிற விவரம் இல்லை.

மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா காலத்தில் இருந்து தாமதமாகி தள்ளிப்போய் கொண்டிருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது பெரிய பணியாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பு வீடு வீடாக சென்று சேகரிக்க வேண்டும். அப்போது அவர்களது சாதி குறித்த விவரங்களை கேட்கலாம். 1931ஆம் ஆண்டு தான் நமது பழைய சாதி வாரி கணக்கெடுப்பு ஆகும். கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சில விவரங்களை சேகரித்தார்கள். ஆனால் அந்த விவரங்களை வெளியிடவில்லை. பீகாரில் ஒரு சர்வே நடத்தி, முடிவுகளை வெளியிட்டு, அதற்கு தகுந்தாற்போல் இடஒதுக்கீட்டை மாற்றியது. அது நீதிமன்றத்தில் தாவா ஆக நிற்கிறது. தற்போது பீகார் தேர்தல் வருகிறது. அப்போது பாஜக அதன் உறுதிபடுத்தப்பட்ட கொள்கையை எதிர்த்து ஏன் சொல்ல வேண்டும்?. ஏன் இப்போது திடீரென மாற்றுகிறார்கள். மாறினால் உடனடியாக ரிசல்ட் எவுதும் வரப்போவது இல்லையே? மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு 2 வருடங்கள் ஆகும். பீகார் தேர்தல் சில மாதங்களில் நடந்து முடிந்துவிடும். அப்போது வெறும் தலைப்பு செய்திதான்.
சிந்து நதி, அதன் கிளை நதிகளில் ஓடுகிற தண்ணீரை தேக்கி வைப்பதாக இருந்தால், தமிழ்நாடு முழுவதும் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைப்பதற்கு சமமாகும். அது எப்படி சாத்தியமாகும். சிந்து நதியில் உள்ள அணை போன்று 40 அணைகளை கட்ட வேண்டும் என்கிறார்கள். ஒரு அணை கட்டுவதற்கு 15 ஆண்டுகளாகும். மலைப்பிரதேசம் வழியாக வரும் தண்ணீரை எப்படி அணைக்கட்டி தடுக்க முடியும். அப்படி என்றால் எவ்வளவு மக்கள் பாதிக்கப்படுவார்கள். அப்போது வெறுமனே வாக்கு வங்கிக்காகவே பேசுகிறார்கள். பீகார் தேர்தலை மனதில் வைத்தே மார் தட்டுதல் பற்றி பேசுகிறார்கள். ஆனால் நிரந்தரமான தீர்வு பற்றி பேசவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பாக இருந்தாலும், காஷ்மீர் பிரச்சினையாக இருந்தாலும் எல்லாம் பீகார் தேர்தலை மனதில் வைத்தே பேசுகிறார்கள் என்றால், நாட்டினுடைய தேர்தல் அரசியல் எவ்வளவு மோசமாக உள்ளது என்று பாருங்கள்.
காஷ்மீர் விவகாரத்தை தேர்தலுக்காக பயன்படுத்துகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு பாஜக மீது எழுகிறது. அதற்கு காரணம் தீவிரவாதத்தை நாடே கண்டிக்கிறது. தாக்குதலில் உயிரிழந்த கடற்படை வீரரின் பிறந்தநாள் நேற்று. அந்த புகைப்படம் உலகம் முழுவதும் வருத்தத்தையும், வேதனையையும் சம்பாதித்த புகைப்படமாகும். அவர் தனது கணவரின் பிறந்தநாளையொட்டி ரத்த தான முகாம் ஏற்பாடு செய்துள்ளேன். தயவு செய்து ரத்தம் சிந்துகிறபோது, மத ரீதியாக சிந்த வேண்டாம். என் கணவரின் ஆத்மா சாந்தி அடைய இந்தியா முழுக்க பிரார்த்தனை செய்யட்டும். ஆனால் மத வெறுப்பு வேண்டாம் என்கிறார். இரு தரப்புக்கு இடையே தீர்க்க முடியாத வெறுப்பை நீங்கள் உருவாக்கிவிட்டால் யாராலும் எப்போதும் நிம்மதியாக வாழ முடியாது. யாரோ 5 பேர் செய்த தவறை எல்லோரும் சேர்ந்து கண்டிக்கிறோம். ஆனால் அதை தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது மிக மிக தவறாகும்.
தற்போது எல்லையை மூடிவிட்டார்கள். இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்பவர்கள் எல்லாம் வெளியில் காத்திருக்கிறார்கள். இதனால் இந்தியா பாகிஸ்தானியர்கள் நாடு திரும்புவதற்கான காலக்கெடுவை கால வரையின்றி நீட்டித்துள்ளது. ஆனால் அவர்கள் கேட்டை திறக்கவில்லை. நல்லெண்ண அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் இருந்து வாகனங்களை மட்டும் அனுமதித்து வருகின்றனர். இதை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை தேச விரோதிகள் என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் இந்த நாட்டில் எல்லோரும் தேச விரோதிகளா? இந்த போக்கு நாட்டிற்கு நல்லது அல்ல.
காஷ்மீர் விவகாரம் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பை நோக்கி தள்ளப்படுகிற அளவுக்கு பாஜக பலவீனமாக உள்ளதா? என்று கேள்வி எழலாம். நிதிஷ்குமாரை ஆதரிக்கும் பீகாரில் உள்ள குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள், வக்பு மசோதாவால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் நிதிஷுக்கு எதிராக உள்ளனர். பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி இம்முறை தேர்தலில் வெறறி பெற முடியாது என்று சொல்கிறார்கள். பீகாரில் அதற்கான அஸ்திரமாக சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்துள்ளார்கள். எல்லாவற்றையும் வடஇந்திய அரசியல் மாதிரியே டீல் செய்து, அப்படியே மத வாக்குகளாக மாற்றுகிறபோது, அதே காலகட்டத்தில் தமிழகம், மேற்கு வங்கத்திலும் தேர்தல் வருகிறது. தற்போது சாதிவாரி கணக்கெடுப்பை பீகார் தேர்தலுக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.