spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஒத்திகை பார்த்த பயங்கரவாதிகள்! பொய் சொன்ன அமித்ஷா! விளாசும் மருதையன்!

ஒத்திகை பார்த்த பயங்கரவாதிகள்! பொய் சொன்ன அமித்ஷா! விளாசும் மருதையன்!

-

- Advertisement -

பஹல்காம் தாக்குதலுக்கு குறைபாடுகளுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காதது ஏன் என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

we-r-hiring

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் மத்திய அரசின் தோல்வி மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பரப்பப்படும் வன்மம் குறித்து இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அவதில் அவர் தெரிவித்துள்ளதாவது:-  காஷ்மீர் மக்கள் கேட்பது, தங்களின் தலைவிதியை தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் உரிமை வேண்டும். இதுதான் 1949ஆம் ஆண்டு முதல் காஷ்மீர் மக்கள் முன்வைக்கும் கோரிக்கையாகும். அதற்காக தான் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குகிற சட்டப்பிரிவு 370 கொண்டுவரப்பட்டது. அந்த சட்டப்பிரிவை தான், பிரதமர் மோடி அரசு ரத்து செய்துவிட்டது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை உடைத்து, யூனியன் பிரதேசமாக மாற்றிவிட்டது.

அங்கு தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக உள்ள உமர் அப்துல்லாவுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அம்மாநில காவல்துறை உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிறப்பு அந்தஸ்து வழங்குகிறோம் இந்தியாவுடன் இருங்கள். பொதுவாக்கெடுப்பு நடத்தி பிறகு இந்தியா உடன் இருப்பதா? இல்லையா? என்று  முடிவு செய்து கொள்ளலாம் என்று அன்றைக்கு சொன்னார்கள். ஆனால் பொது வாக்கெடுப்பு நடத்தவில்லை. சட்டப்பிரிவு 370ல் இருந்த சிறப்பு உரிமைகளை காங்கிரஸ் கட்சியே கொஞ்சம் கொஞ்சமாக எடுத்தது. மோடி வந்து 370வது பிரிவையே நீக்கிவிட்டார். பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலமும் கிடையாது என்று மூன்றாக உடைத்துவிட்டார்கள். முதலமைச்சருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று சொன்னால் மாநில மக்களுக்கு சந்தோஷம் வருமா? நாம் வாக்களித்த நபர்களுக்கு அதிகாரம் இல்லை என்றால் மக்களுக்கு கோபம் வருமா? இல்லையா?

காஷ்மீர் மக்கள் அச்சத்தில் அடக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் மகிழ்ச்சியுடன் இல்லை. அவர்களை துப்பாக்கி முனையில் அடக்கிவைத்துவிட்டு இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள மக்களை சுற்றுலா வர அழைப்பு விடுத்தனர். அப்படி சுற்றுலா பயணிகள் காஷ்மீர் செல்லும்பட்சத்தில் அவர்கள் செல்லக்கூடிய முக்கியமான இடங்களில் ஒன்று பகல்காம். ஜம்மு – காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், தி வயர் இதழுக்கு அளித்த நேர்காணலில், காஷ்மீருக்கு சுற்றுலா செல்பவர்கள், அந்த இடத்திற்கு வராமல் போக மாட்டார்கள் என்று சொல்கிறார். அவ்வளவு முக்கியமான இடத்தில் பாதுகாப்பு வழங்கவில்லை என்றால் இவர் என்ன ஆட்சி நடத்துகிறார்கள் என்கிறார். என்டிடிவி வெளியான அறிக்கையில், தீவிரவாதிகள் ஒரு வாரத்திற்கு முன்னதாக ஆயுதம் இன்றி அந்த பகுதியில் ஒத்திகை பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரன்ட்லைனில் வெளியாகியுள்ள செய்தியில், பஹல்காம் பகுதியில் ஜனவரி வரை சிஆர்பிஎப் அவுட் போஸ்ட் இருந்துள்ளதாக கூறியுள்ளனர். சம்பவம் நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக ஜம்மு – காஷ்மீர் செல்வதாக இருந்தது. உளவுத்துறை தகவல் வந்ததால் தனது பயணத்தை ரத்து செய்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உங்களுடைய பாதுகாப்பிற்காக பயணத்தை ரத்து செய்தீர்களே, மக்கள் பாதுகாப்பிற்காக என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அந்த கேள்விக்கு பதில் இல்லை.

தாக்குதல் நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக  உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீருக்கு சென்று, அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த தகவலை தெரிவித்துள்ள சத்யபால் மாலிக், அமித்ஷா என்ன ஆய்வுகூட்டம் நடத்தினார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, இந்த தோல்விக்கு இதுவரை எந்த ஒரு விளக்கமும் சொல்லப்படவில்லை. 2019ல் புல்வாமாவில் அவ்வளவு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு 11 உளவுத்துறை தகவல்கள் இருந்தும் தடுக்கவில்லை என்று பிரன்ட்லைன் கட்டுரையில் சொல்லியுள்ளனர். விமானம் கொடுக்காமல் அனுப்பியதால்தான் இறந்தார்கள் என்று நான் சொன்னபோது மோடி வாயை மூடு என்று சொன்னதாக சத்யபால் மாலிக் சொல்கிறார். அதை காண்பித்து 2019 தேர்தலில் மோடி வெற்றி பெற்றுவிட்டார். தற்போது பல்காம் தாக்குலுக்கு மோடி பேசுகிறார், உள்நாட்டிற்குள்ளே எதிரிகள் உள்ளனர் என்று சொல்கிறார்.

பஹல்காமில் கொல்லப்பட்ட கடற்படை வீரரின் மனைவி, காஷ்மீரிகளையும் முஸ்லீம்களையும் எதிரிகளாக பார்க்காதீர்கள் என்று சொன்னார். அதற்காக அவரை தற்போது ட்ரோல் செய்கிறார்கள். மோடியின் பேச்சு ஜாடையாக என்ன சொல்கிறார் என்றால்?  எதிரிகள் உள்நாட்டில் இருக்கிறார்கள். அப்படி என்றால் அது யார்? காஷ்மீரிகள், முஸ்லிம்கள். அப்படிதானே தாக்குதல்கள் நடக்கிறது. பஹல்காம் தாக்குதலில் பாதுகாப்பு தோல்விக்கு யார் காரணம்? என்ன காரணம் என்பதே ஏன் சொல்லப்படவில்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அமித்ஷா பொய் சொல்லியுள்ளார். அங்கு காவல்துறை அனுமதி இன்றி அவர்கள் சுற்றுலா சென்றார்கள் என்று பொய் சொல்கிறார். ஆனால் அப்படி இல்லை என்று பத்திரிகைகளில் சொல்லியுள்ளனர். தற்போது எதிர்க்கட்சிகள் இந்திய ராணுவத்தின் பின்னால் நிற்பதாக சொல்கிறார்.

கேரளா வளா்ச்சியடைய விழிஞ்சம் துறைமுகம் ஒரு சிறந்த உதாரணம் – பிரதமா் மோடி பேச்சு

காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும் என்றால், அந்த மக்களுக்கு உரிய ஜனநாயக உரிமைகள் உத்திரவாதம் செய்யப்பட்டால்தான். பாகிஸ்தானில் குண்டு போடுவதற்கு முன்பாக காஷ்மீரில் ஒரு 10 வீடுகள் முன்பாக குண்டு போட்டார்கள். பாஜக என்ன செய்கிறது. இவர்கள்தான்  எதிரி என்று காட்டுகிறார்கள். மத்திய அரசே காஷ்மீர் மக்கள் இந்த தாக்குதலுக்கு உடந்ததையாக  இருந்துள்ளனர் என்று நினைக்கிறார்கள். ஆனால் தாக்குதல் நடந்த உடன் அங்கிருந்தவர்களை ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அழைத்துவந்த டாக்சி ஓட்டுநர்கள் யாரும் பணம் வாங்கவில்லை. தங்க ஓட்டல் இல்லாதவர்கள் எல்லாம் மசூதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீருக்கு தனி நாடு கேட்கக்கூடிய ஹுரியத் மாநாட்டு கட்சி உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் சேர்ந்து முழு அடைப்பு போராட்டம் நடத்தியுள்ளன.

தாக்குதல் நடைபெற்று பாதுகாப்புக்கான கூட்டம் நடைபெறுகிறது. காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை எழுந்து வெளியே செல்ல சொல்கிறார்கள். அப்போது, தேர்வு செய்யப்பட்ட முதல்வராக இருந்தாலும் காஷ்மிரிகளை நம்ப முடியாது என்கிறார்கள். இது காலனி ஆதிக்க மனநிலையாகும். போரினால் இந்த பிரச்சினை தீரப் போவது இல்லை. மாறாக இந்த பிரச்சினை தீவிரமடையும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நாடு முழுவதும் போர் ஒத்திகை நடைபெறுவது ஏன்? இதனுடைய நோக்கம் சேத பக்தி என்கிற பெயரில் போர் வெறிக்கு ஆட்படுத்துவது ஆகும். இதற்கு நாம் ஆட்படக்கூடாது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான வழி என்ன? இதுபோன்ற நேரங்களில் நிதானமாக யோசிப்பதுதான் இதற்கு தீர்வாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ