spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆன்மீகம்சபரிமலையில் சித்திரை விஷு விழா தொடக்கம்

சபரிமலையில் சித்திரை விஷு விழா தொடக்கம்

-

- Advertisement -

சபரிமலையில் சித்திரை விஷு விழா தொடக்கம்

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை மாத பிறப்பையொட்டி நேற்று முன்தினம் மாலை கோவில் நடை திறக்கப்பட்டது.

சபரிமலையில் சித்திரை விஷு விழா தொடக்கம்

we-r-hiring

சபரிமலையில் நடை பெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான சித்திரை விஷு கனிகாணும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது. சித்திரை முதல் நாளில் இறைவன் முன்பு படைக்கப்படும் காய், கனி வகைகளை பார்த்து சாமி தரிசனம் செய்தால் அந்த ஆண்டு இனிமையாகவும், வளமையாகவும் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்நிலையில் சித்திரை விஷு நாளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என் கோவில் நிர்வாகம் தெரிவித்தது. இதற்காக அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

சபரிமலையில் சித்திரை விஷு விழா தொடக்கம்

அப்போது காய், கனிகள் அடுக்கி வைக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பூஜைகள் முடிந்த பின்னர் சாமி முன்பு படைக்கப்பட்ட காய், கனிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

சித்திரை விஷு கனிகாணும் நிகழ்ச்சிக்காக திறக்கப்படும் கோவில் நடை வரும் 19-ம் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.

MUST READ