Homeசெய்திகள்ஆன்மீகம்திருவொற்றியூரில் அம்மன் கோயிலை பழுது பார்த்து தந்த இஸ்லாமியருக்கு பாராட்டு

திருவொற்றியூரில் அம்மன் கோயிலை பழுது பார்த்து தந்த இஸ்லாமியருக்கு பாராட்டு

-

- Advertisement -

திருவொற்றியூரில் அம்மன் கோயிலை பழுது பார்த்து தந்த இஸ்லாமியருக்கு பாராட்டு

ஆடி மாதத் திருவிழாவிற்காக பராமரிப்பு இல்லாத அம்மன் கோயிலை சீரமைத்து கொடுக்கும் இஸ்லாமியரின் செயல் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

சென்னை திருவொற்றியூரில் தியாகராயபுரம் குடியிருப்பு பகுதியில் பராமரிப்பு இல்லாமல் இருந்த தேசமுத்து மாரியம்மன் கோவிலை, அப்பகுதியை சேர்ந்த முனீர் என்ற இஸ்லாமியர் ஒருவர் சீரமைத்து வருவது அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

திருவொற்றியூரில் அம்மன் கோயிலை பழுது பார்த்து தந்த இஸ்லாமியருக்கு பாராட்டு

தியாகராயபுரத்தில் பழமை வாய்ந்த கிராம கோயிலான தேசமுத்து மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா நடைபெறும் நிலையில், கோவிலை யாரும் பராமரிக்காததால் கோவில் முழுவதும் சிமெண்ட் பூச்சு கலவை கீழே விழுந்து, மழை நீர் ஊறி சுவற்றில் மின்சாரம் பாய்ந்து வந்தது. இதனால் கோவிலுக்கு வரும் பெண்கள் மிகுந்த அச்சப்பட்டனர்.

திருவொற்றியூரில் அம்மன் கோயிலை பழுது பார்த்து தந்த இஸ்லாமியருக்கு பாராட்டு

இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த முனீர் என்ற எலக்ட்ரீசியன் தன்னுடைய சொந்த செலவில் மின்சார ஒயர்களை பழுது பார்த்து புதுப்பித்து தந்து, மேலும் சிமெண்ட் பூச்சுகளை பராமரித்து, கோயில் தளத்தின் மேலே மழை நீர் ஒழுகாத அளவிற்கு ஒரு லட்ச ரூபாய் செலவில் புதியதாக டைல்ஸ் தரை அமைத்துக் கொடுத்து வருகிறார்.

ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில் தான் வசிக்கும் பகுதியில் அம்மன் கோவில் திருவிழா நடத்த, கோவிலை சீரமைத்து தரும் இஸ்லாமியரின் செயலை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

MUST READ