spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிதற்காப்பு கலையால் பாலியல் சீண்டலிலிருந்து தப்பிய 13 வயது சிறுமி!

தற்காப்பு கலையால் பாலியல் சீண்டலிலிருந்து தப்பிய 13 வயது சிறுமி!

-

- Advertisement -

ஆவடியில் CRPF வளாகத்திற்குள் CRPF காவலர் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த CRPF காவலர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா்.தற்காப்பு கலையால் பாலியல் சீண்டலிலிருந்து தப்பிய 13 வயது சிறுமி! ஆவடி அருகே சி ஆர் பி எப்  காவலரின் 13வயது மகள் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பள்ளி முடித்து கராத்தே பயிற்சியை நிறைவு செய்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது CRPF காவலர் சுரேஷ்குமார் என்பவர் சிறுமியிடம் இருட்டில்  பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கராத்தே பயிற்சி பெற்று வருவதால் பாலியல் சீண்டல் ஈடுபட்ட CRPF காவலரை துரத்தி சென்று அடித்து முகத்தில் கீறி அடையாளம் ஏற்படுத்தி விட்டு அவரிடமிருந்து தப்பியுள்ளார்.தற்காப்பு கலையால் பாலியல் சீண்டலிலிருந்து தப்பிய 13 வயது சிறுமி! இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.இதனால் அதிர்ந்து போன பெற்றோர்கள் CRPF உயரதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் சிறுமி தான் ஏற்படுத்திய காயத்தை வைத்து அடையாளமும் காட்டியுள்ளார். ஆனால் CRPF அதிகாரிகள் எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது .

இதனால் விரக்தி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகார் அடிப்படையில் போக்சோ வழக்கு பதிவு செய்த ஆவடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் முத்துகுமாரி CRPF வளாகத்திற்குள் சென்று உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு CRPF காவலர் சுரேஷ் குமாரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சு.வெங்கடேசன் மீது கொலை மிரட்டல் – பல்வேறு கட்சியினர் கண்டனம்

we-r-hiring

MUST READ