spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடி அருகே கோல் போஸ்ட் விழுந்து சிறுவன் பலி!

ஆவடி அருகே கோல் போஸ்ட் விழுந்து சிறுவன் பலி!

-

- Advertisement -

ஆவடி அருகே கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது எதிர்பாராத விதமாக இரும்பு கோல் போஸ்ட் தலை மீது விழுந்ததில் சிறுவன் பலி.

ஆவடி அருகே கோல் போஸ்ட் விழுந்து சிறுவன்  பலி!ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் ஆத்விக் (7). ஆவடி விமானப்படை பள்ளியில் 2ம் வகுப்பு பயின்று வந்தான். இந்த நிலையில் அத்விக் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஊழியர்கள் குடியிருப்பில் உள்ள மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தான்.

we-r-hiring

அப்போது கால்பந்து இரும்பு கோல் போஸ்ட் எதிர்பாராத விதமாக சிறுவனின் தலை மீது விழுந்துள்ளது. இதில் தலையில் சிறுவன் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தான். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற முத்தாபுதுப்பேட்டை போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

MUST READ