spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஇறப்பிலும் இணை பிரியாத தம்பதியர்-கணவன் மனைவி ஒரே நாளில் மரணம்

இறப்பிலும் இணை பிரியாத தம்பதியர்-கணவன் மனைவி ஒரே நாளில் மரணம்

-

- Advertisement -

இறப்பிலும் இணை பிரியாத தம்பதியர்.இக்கால சந்ததிகளுக்கு தேவையான செய்தி

ஆவடி அருகே ஒரே நாளில் வயதான தம்பதியினர் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இறப்பிலும் இணை பிரியாத தம்பதியர்-கணவன் மனைவி ஒரே நாளில் மரணம்

we-r-hiring

ஆவடி காமராஜ் நகர் பகுதி 6 தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது95 வயது மூப்பு காரணமாக வீட்டில் மருத்துவம் பார்த்து வந்த நிலையில் அவரது மனைவி வசந்தம் வயது82 வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதித்த நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.

இந்நிலையில் வீட்டில் இருந்த கணவருக்கு மனைவி உடல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த தகவல் தெரிந்தவுடன் அதிர்ச்சியில் வீட்டில் இருந்த கணவர் இறந்து விட்டார். மருத்துவமனையில் அனுமதித்து இருந்த மனைவி வசந்தம் அவர்களுக்கு கணவர் இறந்த தகவல் தெரிந்தவுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் மனைவியும் இறந்த சம்பவம் குடும்பத்தார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இறந்த தம்பதியர்களின் இரு உடல்களையும் ஆவடியில் உள்ள அவர்களது வீட்டில் வைத்துள்ள சம்பவம் ஆவடி சுற்றுப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது, எப்பொழுதும் எங்கு சென்றாலும் இணைபிரியாமல் சென்று வந்த தம்பதியினர், இறப்பிலும் இனைந்தே இருப்போம் என நிறுபித்துள்ளனர்.
இருவரும் ஒரே நாளில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இறப்பிலும் இணை பிரியாத இந்த தம்பதியினரின் சிநேகம் இக்கால சந்ததிகளுக்கு தேவையான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ