Homeசெய்திகள்ஆவடிஆவடியில் ஆல் இந்தியா ரேடியோவுக்கு சொந்தமான இடத்தில் தீ பற்றி எறிந்தது

ஆவடியில் ஆல் இந்தியா ரேடியோவுக்கு சொந்தமான இடத்தில் தீ பற்றி எறிந்தது

-

- Advertisement -

சென்னை ஆவடி அருகே “ஆல் இந்தியா ரேடியோவுக்கு” சொந்தமான இடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவடியில் உள்ள இந்திய வானொலி மையத்திற்கு சொந்தமான சுமார் 120 தடை செய்யப்பட்ட காப்பு காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் இருந்து 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயனைப்பு வீரர்கள் தீயை அனைத்து கட்டுப்படுத்தியுள்ளனர்.

ஆவடியில் ஆல் இந்தியா ரேடியோவுக்கு சொந்தமான இடத்தில் தீ பற்றி எறிந்தது

சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயலில் ”ஆல் இந்திய ரேடியோவிற்கு” சொந்தமான சுமார் 120 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த பகுதியில் ஆல் இந்திய ரேடியோ அலுவலகம் மற்றும் அதற்கான ராட்சத டவர்களும் உள்ளன.

அப்பகுதியில் எஞ்சிய பல ஏக்கர் நிலங்கள் காடு போல் காட்சி அளிக்கும். நேற்று மதியம் இந்த பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக ஆவடி தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் காட்டுப்பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயற்சித்தனர்.

மேலும், பரப்பளவு அதிக அளவில் இருந்த காரணத்தினால் தீயை கட்டுப்படுத்துவது தீயணைப்பு துறை வீரர்களுக்கு சவாலாக இருந்துள்ளது. இதனையடுத்து அம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் இருந்து ஐந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

தீயணைப்புத் துறை வீரர்கள் மேற்கொண்ட அடுத்தடுத்து துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. சுட்டெரித்த வெயில் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் திருமுல்லைவாயில் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ