Homeசெய்திகள்ஆவடிபொறுமையோடு இருங்கள்- மூன்று நாள் கிறிஸ்துவ மாநாடு

பொறுமையோடு இருங்கள்- மூன்று நாள் கிறிஸ்துவ மாநாடு

-

ஜி கே எஸ் கன்வென்ஷன் ஹாலில் பொறுமையோடு இருங்கள் என்னும் தலைப்பில் கிறிஸ்துவ யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு கூட்டம் இன்று அக்டோபர்  20 முதல் 22 வரை நடைபெறுகிறது..

பொறுமையோடு இருங்கள்- மூன்று நாள் கிறிஸ்துவ மாநாடு  யெகோவாவின் சாட்சிகளின் தமிழ்நாடு பிரதிநிதி மனோஜ் சாக்கோ,யெகோவாவின் சாட்சிகள் 100 வருடங்களுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள விளையாட்டு அரங்கங்கள், காட்சி அரங்கங்கள், மாநாட்டு மையங்கள், மற்றும் திரையரங்குகளில், மாடுகளை நடத்தி வருவதாக தெரிவித்தார்.மேலும் தற்போது ஆவடியில் இந்த மாநாடு மீண்டும் இன்று முதல், நாளை,நாளை மறுநாள் என மூன்று நாட்களும் மற்றும் 27-29 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும், மற்றும் எவ்வித பாகுபாடும் இல்லை எனவும் தெரிவித்து அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொண்டார்.

அக்டோபர்  20 முதல் 22 வரை ஆவடி காமராஜர் நகர் பகுதியில் ஜி கே எஸ் கன்வென்ஷன் ஹாலில் பொறுமையோடு இருங்கள் என்னும் தலைப்பில் மூன்று நாள் கிறிஸ்துவ யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு கூட்டம் நடைபெறவுள்ளது.இக்கூட்டத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மனோஜ் சாக்கோ கேட்டுக்கொண்டார்.

இந்த மூன்று நாள் மாநாட்டில் பொறுமையின் தன்மையை குறித்து விழிப்புணர்வு செய்யப்படுகிறது.மேலும் பொறுமை என்பது ஒவ்வொருவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் வெளிப்படுத்த விரும்பும் ஒரு அழகான குணம் என மனோஜ் சாக்கோ தெரிவிக்கிறார்.பரபரப்பான இந்த இயந்திர உலகில் இயந்திரமாக சுழலும் மனிதர்களின் மன அமைதிக்காகவும் பொறுமையின் தன்மை குறித்து விளக்கமளிக்கும் விதமாக இந்த மாநாடு திகழும் என கூறி அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மனோஜ் சாக்கோ அழைப்பு விடுக்கிறார்.

 

MUST READ