- Advertisement -
கற்பித்தலில் மாணவர்களுக்கு அறிவு, திறன் மற்றும் நல்லொழுக்கத்தை புகுத்தி, தொழில்நுட்பத்திறனை பயன்படுத்தி, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பில் “நல் ஆசிரியர் விருது” வழங்கப்பட்டது.
அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை (செப் -05) அன்று கோவர்த்தனகிரி, ஆவடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியை திருமதி.கி.சரஸ்வதி அவர்களுக்கு 2024- 2025 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான ”டாக்டர் இராதாகிருஷ்ணன் நல் ஆசிரியர் விருது” கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் வழங்கப்பட்டது.