ஆவடி பகுதியில் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கி வைத்த மூன்று பேர் கைது
ஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழ்நாடு ஹவுசிங் போர்டு நம்பர் 3070-இல் குடோன் ஒன்று அமைந்துள்ளது. அந்த குடோனில் குற்றவாளிகள் மூன்று பேர் வாடகைக்கு எடுத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா புகையிலை பொருட்களான கூல் லிப் விமல் ஹேண்ஸ் மாவா போன்ற புகையிலை பொருட்களை வைத்து வியாபாரம் செய்தது காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடைக்கு விரைந்து குற்றவாளிகளை கைது செய்து சுமார் 150 கிலோ மதிப்புள்ள பான் மசாலா பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
மேற்படி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்கள் உணவு பாதுகாப்பு அதிகாரி வெங்கடேசன் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேற்படி இடத்திற்கு விரைந்து கடையில் உள்ள பொருட்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு கடை மற்றும் குடோனை பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொண்டார். மேற்படி குற்றவாளிகள் சோமசுந்தரகனேஷ் (53),இருலான்டி (37), மகேந்திரகுமார் ஆகியோர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பின் புழல் சிறையில் அடைத்தனர்..