ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்-குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆவடியில் ஜவஹர்லால் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
சிறப்பு வாய்ந்த தினங்களில் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினமாகும். இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாளானது ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.நவம்பர் 14 இன்று அவரது 133வது பிறந்தநாள்.
நேரு தனது பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுமாறு கூறியதை தொடர்ந்து, இன்று ஒவ்வொரு பள்ளிகளிலும் குழந்தைகள் தினமானது சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஜவர்கலால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மார்க்கெட் பகுதி காவல் துணை ஆணையர் அலுவலகம் அருகில் உள்ள நேரு திருவுருவ சிலைக்கு, திருவள்ளுர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் k.ஜெயக்குமார் மற்றும் ஆவடி காங்கிரஸ் கட்சி தலைவர் யுவராஜ் மற்றும் கட்சி உறுப்பினர்கள் நேருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் அவர்கள் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்பித்தனர்.