Homeசெய்திகள்ஆவடிபோலி ஆவணம் தயார் செய்து நில மோசடி

போலி ஆவணம் தயார் செய்து நில மோசடி

-

போலி ஆவணம் தயார் செய்து நில மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

போலி ஆவணம் தயார் செய்து நில மோசடி

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில்
வேலூர் மாவட்டம் சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (45) என்பவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 5 தேதி கொடுத்த புகார் புகாரின் அடிப்படையில் அரவிந்துக்கு சொந்தமான அம்பத்தூர் தாலுக்கா, திருமுல்லைவாயில் கிராமம், சரஸ்வதி நகர், மூன்றாவது தெரு, சர்வே எண் 362. பிளாட் எண். 57-ல் அடங்கிய 3600 சதுரடி நிலத்தினை போலி ஆவணம் தயாரித்து அந்த இடத்தில் வீடு கட்டி வருவதாக திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த தேவராஜ் (48) மற்றும் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ராஜா ஆகி இருவரும் போலி ஆவணங்கள் தயாரித்து அரவிந்தன் நிலத்தில் வீடு கட்டி அபகரித்துள்ளதாக கொடுத்த புகாரின் அடிப்படையில்ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர், உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொண்ட
ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டது. அவர்கள் நிலா அவதரிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது அதனைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துபூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

MUST READ