Homeசெய்திகள்ஆவடி"மோதி பார்ப்போம் வா"-சீமான் அதிரடி பேட்டி

“மோதி பார்ப்போம் வா”-சீமான் அதிரடி பேட்டி

-

சனாதானத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை உடைத்தெறியும் மிகப்பெரிய கருவி தான் குருதி கலப்பு.மோதி பார்ப்போம் வா.. விஸ்வகர்மா திட்டத்தை கடுமையாக விமர்சித்த சீமான்..

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராமில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறையின் மாநில செய்தி தொடர்பாளர் ராஜேஷ் – சுரேகா ஆகியோரது திருமண விழாவில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மணமக்களுக்கு மோதிரம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

"மோதி பார்ப்போம் வா"-சீமான் அதிரடி பேட்டிஅப்போது திருமண மேடையில் பேசிய சீமான் கூறுகையில்,சாதிய பாகுபாடுகளை ஒழிப்பதற்கு ஒரே ஆயுதம் சாதி மறுப்பு திருமணங்கள் தான். இந்த சனாதனத்தில் உள்ள பிறப்பில் வேறுபாடு, ஏற்றத்தாழ்வுகள் கோட்பாட்டை தகர்த்து எறிகிற மிகப்பெரிய கருவிகள் தான் சாதி மறுப்பு திருமணங்கள்.ரத்தக் கலப்பு அல்லது குருதி கலப்பு ஆகும்.

 

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் விஸ்வகர்மா கல்வி திட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,

"மோதி பார்ப்போம் வா"-சீமான் அதிரடி பேட்டிநம் முன்னோர்கள், தலைவர்கள் அடுத்த ஜென்மத்தில் நீங்கள் நாயாகவோ, பேயாகவோ பிறந்து கொள்ளுங்கள்.ஆனால் இந்த ஜென்மத்தில் படித்து மனிதனாகுங்கள் என்று கூறுகிறார்கள். இது தான் நமக்கு நடைபெற்ற புரட்சிகர மாறுதல்.குலக்கல்வி என்றால் கொந்தளிப்பார்கள் என்று வாயில் நுழையாத பெயரை விஸ்வகர்மா என்று வைத்துள்ளனர்.அதே குலக்கல்வி திட்டத்தை வேறு வடிவில் கொண்டு வருவதால் நாங்கள் எதிர்க்கிறோம்.அதை ஏற்கவே முடியாது. இந்தத் தொழிலை இவர் தான் செய்ய வேண்டும் என்றெல்லாம் கிடையாது. இதையெல்லாம் ஏற்க முடியாது என்பது தான் இப்போது நடக்கிற சண்டை.

இது ஒரு முடிவுக்கு வரவேண்டும்.. அதனால இதை நான் ரசிக்கிறேன்.. வரவேற்கிறேன்.. வா மோதி பாப்போம் என்றுதான் சொல்கிறேன். மணி அடிப்பதற்கு கஷ்டப்படுகிறார்கள் என்று ஒரு மிஷினை வாங்கி வந்து மாட்டி விட்டீர்கள். ஆனால் மலம் அள்ளுவதை பார்த்த பிறகும் யாரும் கஷ்டமே பட மாட்டேங்கிறீங்களே அது ஏன்?..ஏனென்றால் அது நாங்கள் செய்வதனால்.என்று கூறினார்.

நடிகை விஜயலட்சுமி வழக்கு குறித்த கேட்ட கேள்விக்கு,

"மோதி பார்ப்போம் வா"-சீமான் அதிரடி பேட்டிஅனைவர் மீதும் வழக்கு தொடரப்படும் நீதிமன்றத்தில் அவர்கள் பதில் சொல்லட்டும்….பேசுவதற்கு முன்னர் இது எல்லாம் யோசித்து இருக்க வேண்டும்.விஜயலட்சுமி,வீரலட்சுமி,முக்தார்,youtuber உள்ளிட்ட அனைவர் மீது வழக்கு தொடுப்பேன்.நீதி மன்றத்தில் சந்திக்கலாம்.ஏழு முறை கரு கலைத்தேன், மாத்திரை வைத்தார்,என கூறியது எல்லாவற்றிக்கும் ஆதாரத்தை காட்டட்டும்…

வீரலட்சுமி நீதிமன்றத்தில் வந்து சவால் விடட்டும். சவால் விடுவதற்கு என்று ஒரு தகுதி உள்ளது. என்னை எதிர்ப்பவர்கள் எல்லாரும் என் எதிரிகள் இல்லை,நான் யாரை எதிர்க்கிரேனோ அவர்கள்தான் என் எதிரிகள்.என்னை எதிர்க்க உங்களுக்கு அவசியம் உள்ளது எனக்கு உங்களை எதிர்க்க அவசியம் இல்லை எனத் தெரிவித்தார்.கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லையா.என்னைப் பற்றிய செய்தி மட்டும் ஊடகங்கள் வெளியிட்டு கொண்டிருக்கிறது.வாயிருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசி விடலாமா.அதை பற்றி யாரும் கேட்க வில்லை.என்னை அசிங்கப்படுத்துவது உங்களுக்கு குறிக்கோளா?என்று ஆவேசத்துடன் சீமான் பேட்டி அளித்தார்.

 

MUST READ