spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடி காமராஜர் நகர் பகுதியில் அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

ஆவடி காமராஜர் நகர் பகுதியில் அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

-

- Advertisement -

ஆவடி காமராஜர் நகர் பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம்

திருவாரூர் பகுதியை சேர்ந்த, தேசிய அளவில் வில்வத்தையில் வெற்றி பெற்ற பெண்ணிற்கு கேடயம் வழங்கி சிறப்பித்த ஆவடி துணை காவல் ஆணையர்

we-r-hiring

ஆவடி காமராஜர் நகர் பகுதியில் அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

ஆவடி காமராஜர் நகர் பகுதி அரிமா சங்கம் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச தலை கவசமும் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆவடி துணை காவல் ஆணையர் அய்மான் ஜமால் IPS கலந்து கொண்டார், மேலும் தலைக்கவசம் அவசியம் என அறிவுருத்த சாலையில்  தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த பெண்ணிற்கு தலைக்கவசம் அணிவித்து, தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்டும் படி அறிவுரைத்தார்.

ஆவடி காமராஜர் நகர் பகுதியில் அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை ஏழை எளிய பொதுமக்களுக்கு வழங்கிய பின் தேசிய அளவில் வில்வித்தை போட்டியில் பரிசு பெற்ற பெண்ணிற்கு கேடயமும் சால்வையும் அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆவடி பகுதி அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் காவலர்கள் உடன் இருந்தனர்.

ஆவடி காமராஜர் நகர் பகுதியில் அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

அதன்பின் ஆவடி அரிமா சங்க தலைவர் ஜாகிர் உசேன் பேசுகையில்,

ஆவடி பகுதியில் நீண்ட நாள் திட்டமாக அரிமா சங்கத்தின் மூலம் இலவச ஹெல்மெட், பால்வாடி குழந்தைகளுக்கு நார்காளி இருக்கைகள், தட்டு, பேட் பால் ஆசிரமத்திற்கு பெட்ஷீட் கொசுவலை  மற்றும் ஃபேன் போன்ற பொருட்கள், இலவசமாக வழங்கப்பட்டது.

இருக்கைகள், தட்டு, பேட் பால்

மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு சீருடையும் சான்றிதழும் வழங்கப்பட்டது பின்பு தேசிய அளவில் வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்ற ஆவடி பகுதியை சேர்ந்த 3 மாணவிகளுக்கு கேடயமும் பரிசும் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற மாணவி அஜிஷா

தேசிய அளவில் வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்ற மாணவி அஜிஷா அவரது கோரிக்கையை தெரிவத்தார், ”தேசிய அளவில் போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளேன், ஆசிய அளவில் விளையாட ஆசைப்படுகிறேன் அதற்கு மாண்புமிகு முதலமைச்சர் விளையாட்டு துறை அமைச்சர் மற்றும் ஆவடி அரிமா சங்கம் உதவி செய்தால் நிச்சயம் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன்” என கூறினார்.

MUST READ