Homeசெய்திகள்ஆவடிஆவடியில் 3000 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் எம்.ஆர்,கே. பன்னீர் செல்வம் மற்றும் சட்டமன்ற...

ஆவடியில் 3000 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் எம்.ஆர்,கே. பன்னீர் செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர்

-

ஆவடி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 3000 பேருக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் எம்.ஆர்,கே. பன்னீர் செல்வம் மற்றும்  சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் வழங்கினார்கள்.

ஆவடியில் 3000 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் எம்.ஆர்,கே. பன்னீர் செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர்

மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக தூய்மை பணிகள் மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் பகுதியில் ஆவடி மேயர் ஏற்பாட்டில் நடைபெற்ற நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், ஆவடி சட்ட மன்ற உறுப்பினர் சா.மு.நாசர் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர்.

ஆவடியில் 3000 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் எம்.ஆர்,கே. பன்னீர் செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர்

இதனை தொடர்ந்து கலைஞர் நகர் பகுதியில் பகுதி செயலாளர் பேபி சேகர் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நிலையில் வரிசையில் நின்று பொது மக்கள் நிவாரண பொருட்களை பெற்று சென்றனர். ஆவடி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆவடியில் 3000 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் எம்.ஆர்,கே. பன்னீர் செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர்

இந்த நிகழ்ச்சியில் ஆவடி மாநகர ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான், மாநகர உதயகுமார், மாநகர செயலாளர் சண் பிரகாஷ், பகுதி செயலாளர்கள் பேபி சேகர், பொன் விஜயன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

MUST READ