சென்னை திருநின்றவூர் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக பள்ளி தாளாளர் வினோத் ஜெயராமன் மீது புகார் கூறி மாணவ மாணவிகள் போராட்டம்.
சென்னை திருநின்றவூர் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மாணவிகளுக்கு ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் வினோத் பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் எழுந்துள்ளது. அதனை தொடர்ந்து பள்ளி தாளாளர் வினோத்தை கைது செய்ய வலியுறுத்தி சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
![பள்ளி தாளாளர் வினோத் ஜெயராமன் மீது புகார்](https://apcnewstamil.com/wp-content/uploads/2022/11/Screenshot-267-1.png)
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பட்டாபிராம் உதவி காவல் ஆணையர் சதாசிவம் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் விசாரணை நடத்தி வருகிறார்.