Homeசெய்திகள்ஆவடி3-வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை

3-வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை

-

3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நண்பரை கொண்று ஆற்றில் வீசிய நண்பர்கள்

ஆவடி, நந்தவனம் மேட்டூரைச் சேர்ந்வர் சையது சகஜூத் (53) காவலாளி. இவரது மகன் யாசின் (24)
வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.கடந்த ஏப். 16-ம் தேதி நண்பர் ஜான் என்பவரை பார்க்க செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றார். ஜானின் மனைவி பிரசவத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஜான் தனது நண்பரான யாசினிடம் தனது குழந்தைகளை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின் கடந்த இரண்டு நாட்களாக யாசின் வீட்டுக்கு திரும்பி வராத நிலையில் அவரது மொபைல் போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

நண்பரை கொண்று ஆற்றில் வீசிய நண்பர்கள்இந்நிலையில், கடந்த ஏப். 18-ம் தேதி ஆவடி கிருபா நகர்  கிருஷ்ணா கால்வாயில் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று நீரில் மிதந்து வந்தது. தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின் உடலை உரிமை கோர யாரும் வராததால், கிராம அலுவலர் அனுமதியின்படி உடல் அடக்கம் செய்யப்பட்டது.இதன் பின்பு ஆவடி போலீசார் சையது யாசின் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது சந்தேகத்தின்படி அவரது நண்பர் ஜான் என்பவரை பிடித்து விசாரணை செய்த போது பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தது.

அதில் கடந்த ஏப்.16ம் தேதி ஜானின் 3 வயது மகளிடம் இறந்த யாசின் பாலியல் தொல்லை கொடுத்ததை நேரில் பார்த்ததால்  ஆத்திரமடைந்த ஜான் அவர் நண்பர்களான டில்லிபாபு, கௌதம் ஆகியோருடன் சேர்ந்து யாசினை அடித்து கொன்று கிருஷ்ணா கால்வாயில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது.

நண்பரை கொண்று ஆற்றில் வீசிய நண்பர்கள்இதையடுத்து ஆவடி போலீசார் யாசினின் நண்பர் திருமுல்லைவாயில்,எட்டியம்மன் நகரைச் சேர்ந்த பெயிண்டர் ஜான்(28)கூலி வேலை செய்து வரும் டில்லி பாபு(24) மற்றும் ஆவடி மோரை பகுதியைச் சேர்ந்த கௌதம்(24)மூவரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குற்றவாளிகளை புழல் சிறையில் அடைத்தனர்.

MUST READ