Homeசெய்திகள்ஆவடிதிருமுல்லைவாயலில் நகைக்கடை உரிமையாளரை கட்டி போட்டு நகைகள் கொள்ளையா?- போலீசார் விசாரணை

திருமுல்லைவாயலில் நகைக்கடை உரிமையாளரை கட்டி போட்டு நகைகள் கொள்ளையா?- போலீசார் விசாரணை

-

- Advertisement -

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் செந்தில் நகரில் ஆரிக்கம்பேடு பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை கடையை நடத்தி வருகிறார்.

திருமுல்லைவாயலில் நகைக்கடை உரிமையாளரை கட்டி போட்டு நகைகள் கொள்ளையா?- போலீசார் விசாரணைநேற்று இரவு சுமார் 8 மணி அளவில் திடீரென கடைக்குள்  முககவசம் அணிந்திருந்த இருவர் கடைக்குள் நுழைந்து கடை உரிமையாளர் ரமேஷ் குமாரை கையில் வெட்டி, தாக்கிவிட்டு நகைகளை கொள்ளை அடித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதில் வெட்டு காயமடைந்த ரமேஷ் குமார் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருமுல்லைவாயல் போலீசார் காயமடைந்த கடை உரிமையாளரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

திருமுல்லைவாயலில் நகைக்கடை உரிமையாளரை கட்டி போட்டு நகைகள் கொள்ளையா?- போலீசார் விசாரணைஇது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் போலீசாரின் விசாரணையில் நகைக்கடை உரிமையாளர் ரமேஷ் முறையான எந்த பதிலும் அளிக்காமல் முன்னுக்கு பின் முரணாக கூறிவருவதால் எத்தனை சவரன் நகை கொள்ளையடிக்கபட்டது? கொள்ளை அடிக்கப்பட்டது உண்மை நகையா அல்லது கவரிங் நகைகளா? என கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கடை உரிமையாளரின் இருக்கைக்கு பின்னால் ஒரு அரிவாள் தொங்கவிட பட்டுள்ளது. இந்த கத்தியை எதற்காக அவ்வாறு வைத்துள்ளார்.

திருமுல்லைவாயலில் நகைக்கடை உரிமையாளரை கட்டி போட்டு நகைகள் கொள்ளையா?- போலீசார் விசாரணைரமேஷ் தீபாவளி பண்டாக மாதம் 1100,2200,4400 என பல்வேறு தொகைகளில் நகை சீட்டு நடத்தி வருகிறார். தீபாவளி நெருங்கி வருவதால் நகைக்கடை உரிமையாளர் ரமேஷ் தானே ஆட்களை வைத்து திருட்டில் ஈடுபட்டாரா?அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இதற்கிடையே கொள்ளை சம்பவம் அரங்கேறிய நகை கடையில் ஆவடி மாநகர காவல் துணை ஆணையர் அய்மான் ஜமால் நேரில் பார்வையிட்டு கொள்ளைப்போன நகைகளை மீட்க வேண்டும் என ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கத்தியால் வெட்டி நகை கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்திஉள்ளது.

MUST READ