Homeசெய்திகள்சென்னைஇலவச பேருந்து சேவை…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…

இலவச பேருந்து சேவை…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…

-

- Advertisement -

தனியார் பள்ளிகளை போன்று சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கான பிரத்யேக இலவச பேருந்து சேவையை சென்னை மாநகராட்சி கல்வித்துறை   அறிமுகப்படுத்தியது.இலவச பேருந்து சேவை…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளதால், தொழிற்சாலைகள் மற்றும் எண்ணூர் துறைமுகத்திற்கு செல்லும் லாரிகள் மணலி விரைவு சாலையை பயன்படுத்திதான் செல்ல வேண்டும். மணலி புதுநகர் அருகே உள்ள கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் மணலி விரைவு சாலையை கடந்து தான் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்று வர வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் அன்றாட வேலைக்கு செல்வதால் தங்களது குழந்தைகளை நெடுஞ்சாலையை கடந்து பள்ளிக்கு அனுப்புவது கடினமாக இருந்தது.

பள்ளி நேரத்திற்கு ஏற்றவாறு பேருந்து வசதி இல்லாது போன்ற காரணங்களால் சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு வர வேண்டிய மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனை கவனத்தில் கொண்ட சென்னை மாநகராட்சி கல்வித்துறை   பள்ளிக்கு சென்று வர கடினமாக உள்ள பள்ளிகளை அடையாளம் கண்டு, மணலி புதுநகர் பகுதியில் உள்ள 3 சென்னை மாநகராட்சி பள்ளிகளை அடையாளம் கண்டு தனியார் பள்ளிகளை போன்று சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கான பிரத்யேக இலவச பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியது.இலவச பேருந்து சேவை…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…இதேபோல் வெட்டுவாங்கேனி, எழில்நகர் என மொத்தம் 3 பகுதியில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கான காப்பாளர், சிசிடிவி கேமராக்கள் என பாதுகாப்பு அம்சங்களுடன் கொண்ட பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாத இறுதியில் தொடங்கி வைத்தார். ஜூன் மாதம் முதல் 1 ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வரும் சென்னை மாநகராட்சி பள்ளி பேருந்து பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ள பள்ளி மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை பயனுள்ளதாக உள்ளது என்றும் தங்களால் பணிக்கு சென்றால் குழந்தைகளை அழைத்து சென்று வருவதற்கு கடினமாக இருந்தது.

கடந்த காலங்களில் 3 கி.மீ தூரம் வரை நடந்து சென்று குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்று வர வேண்டும். மழை காலங்களில் சில நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை கூட இருக்கும் தற்போது இந்த பேருந்து சேவை பேருதவியாக உள்ளது. தனியார் பள்ளியில் தங்களது குழந்தையை சேர்க்க இருந்த பெற்றோர் ஒருவர் இந்த பேருந்து சேவையால் தனது குழந்தையை மாநகராட்சி பள்ளியில் சேர்த்துள்ளார். இதன் மூலம் தங்களது குழந்தையை தனியார் பள்ளிக்கு அனுப்புவது போன்ற உணர்வு ஏற்படுகிறது என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் கற்று தருவதில் மிகுந்த கவனம் செலுத்தி கற்று தரும் ஆசிரியர்கள் மாணவர்களை பேருந்து அழைத்து சென்று வருவதிலும் மிகுந்த கவனத்தை செலுத்தி வருவதால் பேருந்து சேவை இயக்கப்பட்டு வரும் பகுதி பெற்றோர்களிடையே சென்னை மாநகராட்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மண்ணை கவ்வும் மதுரை பிளான்! அமித்ஷா விட்ட டோஸ்! அண்ணாமலை பிளான் க்ளோஸ்!

MUST READ