spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதிமுக ஆட்சியில் தான் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திமுக ஆட்சியில் தான் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

-

- Advertisement -

திமுக ஆட்சியில் தான் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும், தேசிய சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்பவர்களுக்கு அதிகமான ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் தான் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிசென்னை சேத்துப்பட்டில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியின் 309 – வது ஆண்டு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.

we-r-hiring

இந்த விழாவில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், கல்வியுடன் விளையாட்டும் முக்கியம், நமது ஆட்சிப்பொறுப்பேற்றபின்பே தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்பவர்களுக்கு அதிகமான ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

தோல்வி வந்தால் கேப்டன் எடுத்துக்கொள்வதும், வெற்றி பெற்றால் அனைவருக்கும் வழங்குவது என தோல்வியையும் வெற்றியையும் சமமாக எடுத்துக்கொள்வதே விளையாட்டின் மூலமாகவே கிடைக்கும். பெற்றோர் உங்கள்  பிள்ளைகளை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். எல்லாருமே 100/100 வாங்கிட முடியாது, டாக்டரோ, பொறியாளராகவோ வர முடியாது. ஆனால் 90 மதிப்பெண் பெற்றவர் மட்டுமல்ல, 35 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றால் கூட அவர்களுக்கான இருக்கையை உருவாக்குவதே இலக்காக முதலமைச்சர் செயல்படுவதாக கூறினார்.

தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் 44,042 கோடியை பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கியது இந்த அரசு தான். கல்விக்கு வழங்குவது போல உடற்கல்விக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். விளையாட்டிலும்  முதலிடத்தில் நாம் வரவேண்டும், என்றார்.

MUST READ