மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சில நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சளி மற்றும் தொண்டை வலி காரணமாக இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
எனினும், கே.பாலகிருஷ்ணனுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது, எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் போன்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், கே.பாலகிருஷ்ணன் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அனுமதி !