spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்... 3-ம் கட்ட சோதனை ஓட்டம்….

ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்… 3-ம் கட்ட சோதனை ஓட்டம்….

-

- Advertisement -

பூந்தமல்லி-போரூர் இடையேயான ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் 3-ம்  கட்ட சோதனை ஓட்டம் இன்று மதியம் நடைபெறுகிறது. பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான புதிய மெட்ரோ வழித்தடம் இந்த ஆண்டு இறுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ள நிலையில், அடுத்தடுத்த சோதனை ஓட்டத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிரம்!ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் 3-ம் கட்ட சோதனை ஓட்டம்….சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 118.9 கி.மீ தூரத்திற்கு 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி இடையிலான 26.1கிலோ மீட்டர் தூரத்திலான 4வது வழித்தடத்தில் முதற்கட்ட சோதனை ஓட்டம் பூந்தமல்லி பணிமனை முதல் முல்லைத் தோட்டம் வரை 2.5 கி.மீ தொலைவுக்கு 25 கி.மீ வேகத்திலும், 2ம் கட்ட சோதனை ஓட்டம் பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9.5 கி.மீ தொலைவுக்கு 35-40 கி.மீ வேகத்திலும் மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாம் கட்ட சோதனை ஓட்டம் இன்று நண்பகல் போரூர்-பூந்தமல்லி இடையே 9.5 கி.மீ தூரத்திற்கு 40-50 கி.மீ வேகத்தில் இயக்கப்பட உள்ளதாகவும் இதுவரை பூந்தமல்லி பணிமனையில் தொடங்கி  போரூர் நோக்கி சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் இந்த முறை மறு மார்க்கமாக போரூரில் இருந்து பூந்தமல்லி பணிமனை நோக்கி இரயில் இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் போரூரில் தொடங்கி பூந்தமல்லி பணிமனை வரையில் மூன்றாம் கட்ட சோதனை ஓட்டம் இன்று நடைபெற உள்ளது.

பவர் கட்டால் நீட் மறுதேர்வு வழக்கு தள்ளுபடி… சென்னை உயர் நீதிமன்றம்…

we-r-hiring

 

MUST READ