புகார் அளிக்க வந்த பெண்ணிடம் கண்ணியக் குறைவாக நடந்த காவல் ஆய்வாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.நிலப் பிரச்சினை தொடர்பாக தந்தை மற்றும் சகோதரனுக்கு எதிராக சென்னையைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யாமல், புகாரை முடித்து வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்கச் சென்ற தன்னை கண்ணிய குறைவாக நடத்தியதாகவும், அவமரியாதை செய்ததாகவும், கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் சாந்த மூர்த்திக்கு எதிராக பிரியதர்ஷினி என்பவர் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், காவல் நிலையங்களுக்கு வரும் பெண்களை எவ்வாறு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் பல உத்தரவுகளை பிறப்பித்த போதும் அதை இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் பின்பற்றவில்லை என்று சுட்டி காட்டினார். புகார் குறித்த நிலையை தெரிந்து கொள்ள வந்த பெண்ணை கண்ணிய குறைவாக நடத்தியது மனித உரிமையை மீறிய செயல் எனக் கூறி, பாதிக்கப்பட்ட பிரியதர்ஷினிக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தொகையை ஆய்வாளர் சாந்தமூர்த்தியிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு கருதி கூடுதல் பெட்டிகள்-சென்னை ரயில்வே கோட்டம்