தனுஷ் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராகவும் அதே சமயம் இயக்குனராகவும் வலம் வருகிறார். அதன்படி கடந்த 2017 வெளியான ப. பாண்டி திரைப்படத்திற்கு பிறகு தனது ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். அதை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக சேகர் கம்முலா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் தனுஷ் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. தற்காலிகமாக D51 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், ஜனவரி 24 இல் தொடங்கப்படும் D51 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நாகார்ஜுனா இணைய உள்ளாராம். தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கிய பின் இப்படத்தில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் படைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனமும், அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து D51 படத்தை தயாரிக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய அளவில் வெளியாக இருப்பதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.