இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தமிழ் சினிமாவில் பீட்சா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மாபெரும் வெற்றி படங்களாக அமைந்தது. அதைத் தொடர்ந்து இவர் சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு சூர்யா 44 என்று தற்காலிகமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அடுத்தது கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் நந்திதா தாஸ், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் படத்தில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு அந்தமான், ஊட்டி, கேரளா போன்ற பகுதிகளில் பல கட்டங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த வாரம் சென்னையில் ஜெயில் போன்ற செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இன்னும் சில நாட்களில் நிறைவடைந்து விடும் எனவும் விரைவில் இந்த படத்தில் டைட்டில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -