தங்கலான் படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.தங்கலான் திரைப்படமானது பா ரஞ்சித்தின் இயக்கத்திலும் நடிகர் விக்ரமின் நடிப்பிலும் உருவாகியிருந்தது. இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருந்தார். கிஷோர் குமார் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார்.
இந்த படத்தில் நடிகர் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன், முத்துக்குமார், டேனியல் கால்டகிரோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருந்த இந்த படம் இன்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இருப்பினும் படத்தின் திரைக்கதை சில இடங்களில் கனெக்ட் ஆகவில்லை என்றும் திரைக்கதையில் குழப்பங்கள் இருப்பதாகவும் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
Oh my god … thanks for this amazing love for #thangalaan … overwhelmed and humbled by ur love …. 🙏🙏🙏 thanks to the whole music team , engineer (@jehovahsonalghr ) , @gdinesh111 , all my programmers … singers lyricists … and last but not the least my director @beemji sir…
— G.V.Prakash Kumar (@gvprakash) August 15, 2024
இவ்வாறு கலவையான விமர்சனங்களை பெற்று வரும் தங்கலான் படத்திற்கு ஜி.வி. பிரகாஷின் இசை மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில், “ஓ மை கடவுளே தங்கலான் படத்திற்கு கிடைத்த வரவேற்பு என்னை திக்கு முக்காட வைக்கிறது. ஒட்டுமொத்த இசை குழுவிற்கும் பாடகர்களுக்கும் பாடலாசிரியருக்கும் இயக்குனருக்கும் விக்ரமுக்கும் எனது நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.