spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனுஷ் இயக்கும் 4வது படத்தில் இணையும் இரண்டு சீனியர் நடிகர்கள்!

தனுஷ் இயக்கும் 4வது படத்தில் இணையும் இரண்டு சீனியர் நடிகர்கள்!

-

- Advertisement -

நடிகர் தனுஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜ்கிரண், ரேவதி ஆகியோரின் நடிப்பில் பவர் பாண்டி எனும் திரைப்படத்தை இயக்கி பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றார். தனுஷ் இயக்கும் 4வது படத்தில் இணையும் இரண்டு சீனியர் நடிகர்கள்!அதைத்தொடர்ந்து தனது 50வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். அதைத்தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் தனுஷ். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில்தான் நடிகர் தனுஷ் மற்றுமொரு புதிய படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்க நடிகர் அசோக் செல்வன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று ஏற்கனவே சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. தனுஷ் இயக்கும் 4வது படத்தில் இணையும் இரண்டு சீனியர் நடிகர்கள்!இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் நடிகர் சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் ஆகிய இருவரும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் தனுஷ் தற்போது குபேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தேரே இஷ்க் மெய்ன் எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ