Homeசெய்திகள்க்ரைம்கோவை அருகே கத்தி முனையில் 1.25 கிலோ தங்கம் கொள்ளை!

கோவை அருகே கத்தி முனையில் 1.25 கிலோ தங்கம் கொள்ளை!

-

- Advertisement -

கோவை கேரள எல்லையான கந்தே கவுண்டன் சாவடி அருகே நகை வியாபாரியிடமிருந்து சுமாா் 1.25 கிலோ மதிப்புள்ள தங்கத்தை 5 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களை காட்டி பறித்து சென்றுள்ளது. அப்பகுதியில், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை அருகே கத்தி முனையில் 1.25 கிலோ தங்கம் கொள்ளை!

திருச்சூரைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் ஜெய்சன் ஜேக்கப், விஷ்ணு ஆகியோர் சென்னையில் தங்கம் வாங்கிச் சென்றுள்ளனர். கோவையில் இருந்து சுமாா் 1.25 கிலோ மதிப்புள்ள தங்க நகைகளுடன் இருவரும் காரில் கேரளா நோக்கிச் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற காரை 5 பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்து சென்றுள்ளது.

கோவை-கேரள எல்லையான கந்தே கவுண்டன் சாவடி அருகே கார் சென்ற போது லாரியை குறுக்கே நிறுத்தி காரை வழிமறித்தனா். பின்னா் வந்த 5 பேர் கொண்ட கும்பல் காரிலிருந்த 2 பேரிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்த சுமாா் 1.25 கிலோ மதிப்புள்ள தங்கநகைகளை பறித்துச் சென்றது. இச்சம்பவம் குறித்து போலீசார்  வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் 2 போலி வழக்கறிஞர்கள் கைது

MUST READ