மின்வாகன மொத்த விற்பனையாரிடம் ரூ.62 லட்சம் மோசடிசெய்த ராஜஸ்தான் ஆசாமி சிக்கியது எப்படி? ஜெய்ப்பூர் போலீசார் உதவியுடன் பிடித்து மயிலாடுதுறைக்கு கொண்டுவந்த போலீசார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் மெயின் ரோட்டில் கேகேஎல் மரைன் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை நடத்தி வருபவர் சண்முகம். எலக்ட்ரானிக் பேட்டரிகார், பேட்டரி பைக் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறார். இவரது இறக்குமதி வசதிகளைக் கண்ட ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச்சேர்ந்த அல் டெக்ஸ் யுனோவேசன் பிரைவேட் லிமிடெட் என்ற . நிறுவன உரிமையாளர் மகேந்திர யாதவ் மற்றும் அவரது சகோதரர் மார்கெட்டிங் மற்றும் நிர்வாக மேலாளர் பிரவீன் யாதவ் ஆகியோர் 450 எலக்ட்ரிக் பைக்குகளைக் கேட்டுள்ளனர்.
விற்பனைக்கு முன்பாக சீர்காழி மொத்த விற்பனையாளர் ஷண்முகம் ஜெய்ப்பூர் சென்று அவரது கடை மற்றும் விபரங்களை அறிந்துவந்தார். அதன்பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ. 1 கோடியே 79 லட்சத்து 68 ஆயிரம் மதிப்புடைய 450 எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் விற்பனை செய்துள்ளார், . அதில் 1 கோடியே 17 லட்சம் பணத்தை கொடுத்துள்ளனர். மீதித்தொகைசுமார் ரூ. 62 லட்சம் பணத்தை ஜெய்ப்பூர் சென்றதும் அனுப்பி வைப்பதாக கூறிச் சென்றவர்கள் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.இதுகுறித்து சண்முகம் இரண்டு முறை ஜெய்ப்பூர் சென்று கேட்டதற்கு தருகிறேன் என்று கூறியும் கொடுக்கவில்லை, வேறு வழியின்றி கடந்த 25.1.2022 அன்று சீர்காழி காவல் நிலையத்தில் சண்முகம் அளித்த புகாரின் பேரில் சட்டப்பிரிவு. 406, 409 420 நம்பிக்கை மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மயிலாடுதுறை குற்றப்பிரிவு போலீசாரது விசாரணையில், பணத்தை தராமல் ராஜஸ்தான் சகோதரர்கள் நம்பிக்கை மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் டிஎஸ்பி ராஜேந்திரன் வழிகாட்டுதலின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி எஸ்.ஐ விஜய் முத்துக்குமார் உள்ளிட்ட போலீசார் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் செல்வதற்கு அனுமதி அளித்தனர் அதன்பேரில் போலீசார் சென்றனர், .ஜெய்ப்பூர் கர்தாமி பகுதி காவல் நிலையத்திற்கு சென்ற மயிலாடுதுறை போலீசார் நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்தனர், இதற்கிடையே தமிழகத்தை சேர்ந்தவரான ராஜஸ்தான் மாநில என்.ஐ.ஏ.டிஎஸ்பி மணி தனிக்கவனம் செலுத்தினார் தேவையான உதவிகளைசெய்தார், கர்தாமி காவல்நிலையத்திலிருந்து 5க்கும் மேற்பட்ட போலீசாரும் சேர்ந்துகொண்டனர். சோடாலா என்ற ஊரில் சென்று பார்த்தபோது அங்கே அந்த நிறுவனம் மூடப்பட்ட ஆண்டுகணக்காகியிருந்தது, அவனது செல்போன் சிக்னல்மூலம் தேடியபோது 6 செல்போன் எண்களை வைத்திருந்தது தெரியவந்தது.
ஒருவழியாக அவனது மாளிகை போன்ற வீட்டை அடைந்த போலீசார் பிரவின் யாதவ் மட்டும் இருந்துள்ளான், அவனது அண்ணன் மகேந்திரயாதவ் தப்பிவிட்டார், பிரவீன்யாதவை போலீசார் அழைத்தபோது வர மறுத்ததுடன் என் மேல்தான் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுவிட்டதே எதற்காக என்னை அழைக்கிறீர்கள் என்று வர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார், உள்ளூர் போலீசார் பிரவீன் யாதவை அதிரடியாக பிடித்து நிலையம் கொண்டு சென்றனர்.
அங்கிருந்து ஜெய்ப்பூர் மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் கடந்த 22ஆம் தேதி ஆஜர் படுத்தினர், அப்பொழுது பிரவீனுக்கு ஆதரவாக ஜெய்ப்பூரை சேர்ந்த 15 வழக்கறிஞர்கள் வாதாடி பிரவீன்யாதவை தமிழகத்திற்கு அனுப்பவிடாமல் தடுத்து வாக்குவாதம் செய்தனர், ஆனால் பிரவீன்யாதவை தமிழக போலீசாருடன் அனுப்பிவைக்க நீதிபதி உத்தரவு வழங்கினார்.
தமிழக போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளித்த கர்தாமி போலீசார் மற்றும் என்ஐஏ டிஎஸ்பி மணி மற்றும் ராம்குமார் ஆகியோருக்கு நன்றி கூறிய மயிலாடுதுறை போலீசார் பிரவீன் யாதவை அழைத்துகொண்டு மயிலாடுதுறை வந்தனர்,
24ஆம் தேதி நள்ளிரவில் மயிலாடுதுறைக்கு அழைத்து வந்து மயிலாடுதுறை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1ல் ஆஜர் படுத்தினர். நீதிபதி கலைவாணி 7-2-25வரை பிரவீன்யாதவை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டதன் பேரில் திருச்சி மத்திய சிறைக்குக் கொண்டு சென்று இன்று காலை சிறையில் அடைத்தனர். தப்பியோடிய முக்கிய மற்றொரு குற்றவாளியை தேடும் பணியில் ஜெய்ப்பூர் போலீசார் இறங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கைவரிசை காட்டும் வடமாநில குற்றவாளிகளை பிடிப்பது என்பது மிகப்பெரிய காரியம் என்ற நிலையில் மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் அன்னக்கொடி மற்றும் உதவி ஆய்வாளர் விஜய்குமார் சென்று ஜெய்ப்பூர் போலீசார் ஆதரவுடன் தமிழகத்தை சேர்ந்த டிஎஸ்பி ஒருவரின் உதவியுடன் பிடித்து வந்துள்ளது பாராட்டிற்குரியதாகும்.