spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சர்வீஸ் சாலையில் அதிவேகமாக வந்த கார்… அச்சத்தில் உறைந்த காவலர்…

சர்வீஸ் சாலையில் அதிவேகமாக வந்த கார்… அச்சத்தில் உறைந்த காவலர்…

-

- Advertisement -

சென்னை மெரினா கடற்கரையில் காவலர் மீது ஏற்றுவது போல போக்கு காட்டி அதிவேகமாக கார் ஓட்டிய கணவன் மற்றும் மனைவியை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்க்கொண்டனா்.சர்வீஸ் சாலையில் அதிவேகமாக வந்த காா்… அச்சத்தில் உறைந்த காவலர்…இன்று காலை 6:30 மணி அளவில் மெரினா சர்வீஸ் சாலையில் அதிவேகமாக காரை ஓட்டி சென்றபோது, செல்வம் என்ற காவலர் தடுத்து நிறுத்த முற்பட்டார். அப்போது காவலர் மீது மோதுவது போல அதி வேகமாக வந்து மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் காரை ஓட்டிச் சென்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து மெரினா போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். காரின் உரிமையாளரான அபிஷேக் என்ற நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது அவர் தான் காரை ஓட்டியது தெரிய வந்தது.

இதனையடுத்து, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் மற்றும் அவரது மனைவியை மெரினா காவல் நிலைய போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்க் கொண்டனா். விசாரணையில் மயிலாப்பூரைச் சேர்ந்த அபிஷேக் (25), நந்தினி என்பவருக்கும் மூன்று மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது தெரிய வந்தது. இன்று காலை மனைவி மற்றும் மற்றொரு நண்பரோடு காரில் சென்ற போது மனைவி நந்தினிக்கும் அபிஷேக்குக்கும் இடையே காரில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

we-r-hiring

இதனால், வாக்குவாதத்தில் காரை வேகமாக ஓட்டியதாகவும், அப்போது போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும், பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் காரை எடுத்துவிட்டு தப்பிச் சென்றதாகவும் அபிஷேக் போலீசாரிடம் தெரிவித்தாா். காரை ஓட்டிய அபிஷேக், அவரது மனைவி நந்தினி மற்றும் மற்றொரு நண்பர் ஆகிய மூவரும் ஐடி ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக அபிஷேக் மற்றும் அவரது மனைவி நந்தினியிடம் மெரினா போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகரித்து வரும் தங்கத்தின் விலை…நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

MUST READ