காதலை எதிர்த்ததால் பெற்ற தந்தையின் கை, கால்களை காதலனுடன் சேர்ந்து கட்டி அடித்து கொன்ற மகள்.தெலுங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டம், மாரிபேடா மண்டலம் டி.எஸ்.ஆர். ஜெண்டல் தாண்டாவைச் சேர்ந்த தாராவத் கிஷன் (42) காவ்யா என்ற தம்பதிக்கு ரம்யா, பல்லவி ஆகிய இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளாா். டிகிரி படிக்கும் மாணவியான அவரது இளைய மகள் பல்லவி அதே கிராமத்தை சேர்ந்த பூக்யா சுரேஷ் என்பவரை காதலித்து, அவருடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்தார். இது அவரது தந்தை கிஷனுக்கு பிடிக்கவில்லை. இதனால் மகள் பல்லவியிடம் காதலித்து திருமணம் செய்தால் சில மாதங்களிலேயே முறிந்துவிடும் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட வேண்டும். எனது வாழ்க்கையில் பலரது காதல் திருமண வாழ்க்கையை பார்த்திருப்பதாகவும் எனவே நல்ல சம்மந்தம் பார்த்து உனது விருப்பத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைப்பதாக கூறினார். ஆனால் இதனை பல்லவி ஏற்கவில்லை.
மேலும் தனது அம்மா ஜங்னி காதலன் சுரேஷ், மற்றும் அக்கா ரம்யாவின் மனதை மாற்றி தந்தையை கொல்ல திட்டமிட்டார். சுரேஷ் நண்பர்களான சந்து மற்றும் தேவேந்தர் ஆகியோரை கூட்டு சேர்ந்து கொண்டு கடந்த இரண்டு நாட்கள் முன்பு பல்லவி, சுரேஷ், ஜங்னி, ரம்யா, சந்து மற்றும் தேவேந்தர் இணைந்து இரவு கிஷனின் கை, கால்களையும் கட்டி, கண்மூடித்தனமாக அடித்தனர். இதில் கிஷன் பலத்த காயமடைந்த நிலையில், மஹபூபாபாத் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக கம்மம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கிஷன் இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து கிஷன் தாய் சங்கி அளித்த புகாரின்படி மஹபூபாபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கிஷனின் மனைவி ஜங்னி, மகள்கள் ரம்யா, பல்லவி மற்றும் சுரேஷ், சந்து மற்றும் தேவேந்தர் மீது வழக்குப் பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் கவுட் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் மருந்தகம் குறித்த தவறான செய்தி…கூட்டுறவு துறை விளக்கம்
