- Advertisement -
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எடியூரப்பாவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் அவருக்கு பிணையில் வர முடியாத கைது வாரண்டை பிறப்பித்தது பெங்களூரு முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம்.
எடியூரப்பாவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை சிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிஐடி போலீசார் எடியூரப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் நீதிபதி கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எடியூரப்பா தரப்பில் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
தற்பொழுது வரை டெல்லியில் தலைமறைவாகியுள்ள எடியூரப்பா பெங்களூரு திரும்பினால் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது.