Homeசெய்திகள்க்ரைம்ஒயு்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் 5 பவுன் நகை கொள்ளை

ஒயு்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் 5 பவுன் நகை கொள்ளை

-

- Advertisement -

தேவர் குளம் அருகே வீட்டில் ஜெபம் செய்து கொண்டிருந்த தலைமை ஆசிரியையிடம் செயின் பறிப்பு. மிளகாய் பொடியை தூவி கொள்ளையடித்த மர்ம நபருக்கு வலை வீச்சு.ஒயு்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் 5 பவுன் நகை கொள்ளை

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள தடியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி சாந்தி கோவில்அற்புதமணி(60) ஓய்வு பெற்ற தலைமைஆசிரியர். இவர்களது குழந்தைகள் வெளியூரில் வசித்து வரும் நிலையில் கணவன்- மனைவி 2 பேரும் தடியாபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இன்று காலை அந்தோணி வன்னிகோனேந்தலுக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த சாந்தி கோவில் அற்புத மணி ஜெபம் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை சாந்தி கண்களில் வீசிவிட்டு அவர் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.

உடனே சாந்தி கத்தி கூச்சலிட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர் தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தேவர்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திரசேகர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். பட்டப் பகலில் மிளகாய் பொடியை தூவி பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து கொலை மிரட்டல்…15 சவரன் நகை கொள்ளை!

MUST READ