13 வயது சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டாா். இவா் விசாரணைக்கு சென்ற போது, மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளாா்.மதுரவாயிலை சேர்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதி அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருவதாகவும், கடந்த 23ஆம் தேதி அறிவியல் ஆசிரியர் மோகன் என்பவர் சிறுமியை வகுப்பறைக்கு அழைத்துச் சென்று அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது. இதுகுறித்து அதே பள்ளியில் பயின்ற ஆசிரியர் ஒருவருக்கு தெரிய வர தலைமை ஆசிரியர் மூலமாக இந்த தகவலை பள்ளிக் கல்வித் துறையில் புகார் அளித்துள்ளார்.
நேற்று சிறுமியின் தாயார் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், ஆசிரியர் மோகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பள்ளியில் விசாரணை செய்து கொண்டிருந்தபோது, திடீரென ஆசிரியர் மோகன் 25 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளாா்.
தற்கொலைக்கு முயன்ற ஆசிரியர் மோகன் வானகரம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளாா். மேலும் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் இது குறித்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.