spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஆவடியில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை

ஆவடியில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை

-

- Advertisement -

ஆவடியில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை

ஆவடியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சந்தேகத்தினால் ஒருவர் பின் ஒருவராக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

we-r-hiring

ஆவடி, அண்ணாமலை நகர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் (40) ஆவடி காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சத்தியா (36). இவர்களுக்கு ஒரு மகன் (16) ஒரு மகள் (14) உள்ளனர்.

நேற்று மதியம், பிரகாஷ் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன், சத்தியா, பிரகாஷிடம் நீ வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது எனக்குத் தெரியும் என்று கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்துள்ளது .

சிறுமி பாலியல் வழக்கில் எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன்

திடீரென சத்தியா படுக்கை அறையில் சென்று கதவை அடைத்துக் கொண்டு தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட பிரகாஷ் சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலையில் நீண்ட நேரம் ஆகியும் கணவன் மனைவி வெளியே வராததால், பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் கதவைத் தட்டி பார்த்தபோது கதவு திறக்கவில்லை. சந்தேகத்தின் பேரில் ஆவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

ஆவடி போலீசார் இருவர் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் மனைவிக்கு ஏற்பட்ட சண்டையால், இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

MUST READ